பிரச்சினைகளின் அழுத்தம் அதிகரிக்கும்
போதுதான் ஒரு மனிதனின் திறமை வெளிப்படுத்தப்படுகின்றது.மனிதனாகப் பிறந்து விட்டால் பிரச்சினைகள் , சிக்கல்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுத்துத்தானாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதியும் கூட.பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இறந்த பிணமும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.
மனிதன் என்பவன் சாதனையாளன் .யாருக்குத்தான் பிரச்சினை இல்லை , தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் முதல் வெள்ளை மாளிகையில் வாழும் ஒபாமா வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் ஆட்கொள்கின்றன.
ஏதோ பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என்றில்லாம் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்க்கு முற்போக்கு சிந்தனையாளர்களாக நம்மை மாற்றிக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.இதன் போது பிரச்சினைகளையும் , சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய மனோபாவம் வேறூன்ற ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.
ஐயோ !! இது என்னால் முடியாது !! என்று
தன்னை தாழ்த்திக் கொள்ளும் மனிதர்கள் நம்மில் எத்தனை போ் ??? உங்களை நீங்களே ஒரு கணம் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் நான் எப்படிப் பட்டவன் என்று ?? தன்னைப் பற்றி தான் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையே இது.
உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு செக்கனும் ஏதாவதொரு சாதனை நிகழ்ந்து கொண்டேதானிருக்கின்றது. எம்மைப் போன்ற மனிதர்கள் தான் சாதித்தவர்கள் , சாதித்துத்கொண்டிருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாதிக்கவிருக்கின்றவர்கள் என்பதுதான் யதார்த்தம்.
பிறக்கும் போது எவரொருவரும் பெரிய சாதனையாளனாகப் பிறப்பதில்லை ஆனால் இறக்கும் போது ஏராளமான சாதனைகளுக்கு உரித்துடையவனாகவே மனிதன் இறக்கிறான் என்பது காலஓட்டத்தில் நாம் கானும் நிதர்சனமும் கூட.
என்னைப்பொருத்தமட்டில் சாதிப்பதற்க்கு ஊனமோ , பணமோ ஒரு தடையல்ல.வறிய குடும்பத்தில் பிறந்து சாதித்துக் காட்டிய சாதனையாளர்களை இவ்வுலகம் இனறும் நினைவு கூறிக்கொண்டேதானிருக்கின்றது.
அப்துல் கலாம் , ஆபிரஹாம் லிங்கன் போன்றவர்கள் என்னை ஈா்த்த மாமனிதர்கள் ,சாதித்துத்காட்டியவர்கள். ஐசாக் நியுட்டனின் சாதனைகளை என்னுவதற்கே ஒருநாள் வேண்டும் என்பார்கள் அந்தளவுக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எம்மைப் போல் சாதாரன மனிதனாகப் பிறந்து சிகரத்தைத் தொட்ட மாபெரும் சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியவர்.
பிரச்சினைகள் , தோல்விகள், சவால்கள் அழுத்தும் போதுதான் ஒரு மனிதனின் உண்மையான பலம் , திறமை வொளிப்படுத்தப்படுகின்றது. வேறுபட்ட சிந்தனைப் போக்கின் மூலம்தான் மனிதனின் சாதனைகள் எழுச்சி பெற ஆரம்பிக்கினறன என்பதுதான் உண்மை.
நேர்த்தியான சிந்தனைகள் ஒரு மனிதனை சிகரத்தின் உச்சிக்கே தூக்கிச்செல்கின்றன என்றதொரு எண்ணக்கரு என்னுள் ஆழமாக பதிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதன் விளைவுதான் இப்பதிவும் கூட......
-தொடர்ந்து கதைப்போம்-