என்னதான்யா சொல்லப் போறான், என்ற ஆவலில் தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் இதனை சொடுக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதுவொரு சிறுகதையாக இருக்குமோ என்றுகூட சிலர் நினைத்திருக்கக் கூடும், ஆனால் இது அவ்வாறனதொரு பதிவல்ல. தொடர்ந்து வாசியுங்கள் என்னுடைய கிறுக்குத்தனத்தை;
மனிதனாகப் பிறந்து விட்டால் அவன் மீது ஏராளமான சுமைகள் ஏற்றப்படுவது இயல்பே, அதுதான் இயற்கையின் நியதியும் கூட என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். உண்மையில் அந்த சுமைகளைத் தாங்குவதற்கு மனிதனால் முடியுமா என்றதொரு வினாவும் எம் மத்தியில்
தோன்றாமலில்லை. எது எவ்வாறாயினும், மனிதனால் முடியாதது என்று எதையுமே இவ்வுலகில் இறைவன் படைக்கவில்லையென்பது தெளிவே. காலவோட்டத்திற்கேற்ப மனிதத் தேவைகளும் மற்றும் அவனது வேகமும் அபரிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நிச்சயமாக அவற்றை அடைவதற்கு மனிதன் பல்வேறு தடைகளையும் தகர்த்து முற்கள் நிறைந்த கரடு முரடான பாதைகளில் பயணித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க, எந்தன் காலம் வெல்லும் என்ற பின்பே வாங்கடா வாங்க” என்ற பாடல் வரிகள்தான் ஹாபகம் வருகின்றது இதனைக் கிறுக்கும் போது.
நிச்சயமான இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான அபரிதமான திறமையொன்று மறைந்திருக்கின்றது என்பது காலம் காலமாக விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மையாகவிருக்கின்றது. இது உண்மைதானா ?? எனக்குள்ளும் திறமையிருக்கிறதா??? என்னாலும் முடியுமா???? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இதன் விளைவாக கேட்கப்படுகின்றன, எம்மவர்களால்.
இவை அனைத்துக்குமான ஒரே பதில் ஆம் உன்னால் முடியும். என்றவாறுதான் அமையும். திறமையென்பது இறைவன் மனிதனுக்கு கொடுத்ததொரு வரம், அதை சரியாகப் பயன்படுத்துபவன் அவன் மீது ஏற்றப்பட்டுள்ள சுமைகளைத் தாண்டி முற்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் இலகுவாக பயணித்து சாதனையாளனாக இறுதியில் உருமாற்றம் பெறுகிறான்.
மனதில் ஆசையும் வெற்றிக்கான வெறியும் இருக்கிறவனை எந்தவொரு தடைகள் மூலமும் தடுத்த நிறுத்த முடியாது. அவனது இலக்கை நோக்கிய பணயம் எதுவென்று அவன் ஏற்கனவே தீர்மானித்திருப்பான் மேலும் அதன் வழியேதான் அவனது பயணமும் அமையப்பெறும். முட்ககைள தூரப் போட்டு முன்னேறுபவனும் அவனே.
வெற்றியின் ருசி தெரிந்தவனுக்கு தோல்விகள் மற்றும் தடைகள் ஒரு பொருட்டல்ல. அவனுக்கு வேண்டியதெல்லாம் வெற்றி யென்ற மூன்றெழுத்து வார்த்தை. இலக்கைத் தீர்மானித்து திறமை மீது நம்பிக்கை வைத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனது வெற்றியாகவே அவனது ஆழ் மனதில் பதிவாகின்றது. அதுவேதான் இறுதியில் அவனை
சாதனையாளனாகவும் மாற்றுகின்றது.
தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக.......