நீதானே என் பொன் வசந்தம்

திரைப்படங்கள்  பார்ப்பது  ஓரளவு பிடித்த விடயம்  என்ற வகையில்  இந்த பதிவை எழுதுகிறேன். அண்மையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகவும் ஈா்த்த திரைப்படம்தான்   "நீதானே என் பொன் வசந்நம்".

கொஞ்சம் வித்தியாசமான  போக்கில் கதையை  நகா்த்தியிருக்கிறார்   "கௌதம் மேனன்". ஜீவா மற்றும் சமந்தாவின்  நடிப்புக்கள்  உண்மையிலேயே  பிரமாதம் என்றால் அது பொய்யில்லை. அதிலும் சமந்தாவின் நடிப்பு  மனதிலே நிலைத்து  நிற்கின்றது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான  போக்கினை  கடைப்பிடிப்பவா்களில் கௌதம் மேனனையும்  குறிப்பிடலாம்.அந்த வகையில்தான்  இந்ந திரைப்படமும்  அமையப்பெற்றுள்ளது.

ஈகோவையும் , காதலையும் மையப்படுத்தி  எந்தவொரு  சண்டைக்காட்சிகளும்  இன்றி  அருமையான  தமிழ் காதல் காவியம் ஒன்றை தத்ரூவமான முறையிலே  உருவாக்கியிருப்பது  உண்மையிலேயே  பாராட்டப்பட  வேண்டிய  விடயமாகத்தான்  காணப்படுகின்றது.

மூன்று  கட்டமாக  திரைப்படத்தை  நகர்த்தியிருக்கிறார்  கௌதம் மேனன்.
இங்கு சந்தானத்திற்கு  பெரிய அளவில் சந்நா்ப்பம் கொடுக்கப்படவில்லை  இருந்நாலும்  ஓரளவுக்கு  இவருயை  ஜோக்குகள்  சிரிக்க வைக்கின்றன.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே  இசைஞானியின்  தெவிட்டாத இசைதான் என்பதை எவறாலும் மறுக்க முடியாது. " வானம் மெல்ல கீழிறங்கி........"
 பாடல் superb. இசைக்கு நான் தான் ராஜா என்று மீண்டும் தன்னை  அடையாளப்படுத்தியிருக்கிறார் இசைஞானி.




No comments:

Post a Comment

Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...