Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

அடுத்த பில்கேட்ஸ் நீங்களா???

உங்களிடம் நம்பிக்கை, விடாமுயற்சி,  கடின உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகள் போன்றவை காணப்படுமாயின் நீங்கள்தான் அடுத்த  பில்கேட்ஸ் என்று உங்களிடம் பொய் சொல்லி நான் உங்களை உசுப்பியெல்லாம் விட மாட்டேன்.


உலகிலுள்ள ஏராளமானவர்களிடத்தில் நான் மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன என்பதும் அதற்கான காரணமாகும். 

ஆம், தற்போது இவ்உலகில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கத் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். அதேபோல் புதிய மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

ஆனால் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்தால்,

பெரும்பாலானவர்களிடத்தில் பெரிய கனவுகளோ, அதனை செயற்படுத்துவதற்குரிய போதுமான நீண்ட காலத் திட்டமிடல்களோ இல்லை என்பதுதான் விடயமாகும்.

குறுகிய கால சிறிய இலக்குகளை நோக்கி குறிவைத்திருக்கும் இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கிய கனவுகள் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களின் பில்கேட்ஸ் கனவுகளுக்கு முதல் தடையாக அமைந்து விடுகின்றது.

கிழக்காசிய நாடுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து அதனுடன் தொடர்பானதொரு துறையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் இணைந்து கைநிறைய சம்பாதிப்பதனையே அவர்களது வாழ்நாள் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மையாகும். 

அதிலும் குறிப்பாக தொழிநுட்பத் துறையை தெரிவு செய்து ஏதோ ஒரு அளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் வீட்டில் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து ஐயம் செட்டில்ட் டவுன் என்று கூறிக்கொண்டும் திறிகிறார்களாம்...

இதை தவரென்றோ அல்லது இவர்கள் இலட்சியமற்றவர்கள் என்றோ யாராலும் குறை கூற முடியாது.

ஆனால், இவர்கலெல்லாம் அடுத்த பில்கேட்ஸ் அளவுக்கு யோசிப்பார்களேயானால் அதுதான் அவர்களின் வாழ்நாள் முட்டாள் தனம் என்று என்னால் கூற முடியும்.

உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை  -அசிம் பிரேம்ஜி

உங்களின் பெரிய கனவுகள் தான் உங்களின் நீண்ட கால வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாகும். 

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உங்களின் கனவுகளையும் இலக்குகளையும் தீர்மானியுங்கள். 

அதனை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துங்கள். உங்களுக்கென்றே ஒரு கற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள்தான் அந்த சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ்.

உங்களின் கனவுகளுக்கு சக்தி கொடுங்கள் அதனை எவ்வாறு அடையலாம் என்று திட்டமிடுங்கள். வியூகங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பீர்கள் என்று உங்களை நம்புங்கள். அதற்கான தயார் படுத்தல்களை ஆரம்பியுங்கள். 

இவை போதும் உங்களின் பெரிய கனவுகளை நிஜமாக்குவதற்கு. 

ஒருபோதும் ஒரே இரவில் வெற்றிவாகையெல்லாம் சூட முடியாது. அதாவது ஓவர் நைட் சக்ஸஸ் (Overnight Success) எல்லாம் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே சாத்தியமாகும்.

மாறாக, முறையான நீண்டகாலத் திட்டமிடல்கள், நம்பிக்கையான உழைப்பு, அதன் மீது மட்டில்லா ஈர்ப்பு (அல்லது அதன் மீது ஒரு வெறி) போன்றவற்றை ஒருமைப்படுத்திய யாருடைய தலையீடுமற்ற செயற்பட்டாடுகள் அவசியம்.

இதற்கு நீங்கள் தயார் எனின்,

நிச்சயமாக அடுத்த பில்கேட்ஸ் நீங்கள்தான்.

ஒரு வேளை அது நானாகக் கூட இருக்கலாம்!!!!

--பாஸ் முதல்ல உங்கள நம்புங்க, அப்புறமா அடுத்தவன நம்பலாம்--






உன்னால் முடியும் !

ஏதோ சிந்தனையில் இருந்த போது தோன்றிய தலைப்புதான் “உன்னால் முடியும்” .வேறுபட்ட கோணத்தில் கிறுக்குவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அந்த அடிப்படையில்தான் இப்பதிவை எழுதுகின்றேன்.மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவன்தான்  நான்.“ சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று
கூட சொல்லலாம் ஆனால் கடவுளுடன் ஒப்பிட முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்து.




ஏராளமான தோல்விகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்த பெருமைக்குரியவன் என்று கூட என்னைச் சொல்லாம். சில வேளைகளில் தோல்விகள் என்னை முழுமையாக ஆட்கொண்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு வித மாற்றத்தை உணர முடிகின்றது.








“தோமஸ் அல்வா எடிசனைப்” பற்றியதொரு ஆழ்மனப்பதிவானது  நான் நம்பிக்கை இழந்து  போகும் தருணங்களில் என்னுள் புகுந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.எடிசனின் முயற்சியை நினைத்து நான் வியக்காத நாட்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு எடிசனின் முயற்சிகள் மற்றும் தோல்விச்சரித்திரங்கள் என்னுள் மிகவும் ஆழமாக வேறூன்றியிருப்பதை என்னால் கூட சில நேரங்களில் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்றால்  அது மிகையில்லை.


எதையாவத சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேறூன்ற ஆரம்பித்தது எனது பாடசாலைப் பருவத்தில்தான்.பல்வேறு ஆசைகள் , எண்ணங்ளை சுமந்த காலங்கள் அவை.பசுமை கலந்த காலங்கள் மற்றும் நினைவுகளை சுமந்த பருவம் என்று கூட குறிப்பிடலாம்.பாடசாலைக் காலங்களில் பெருப்பாலான தோல்விகளை சந்தித்த அனுபவங்கள் மிகவும் குறைவென்றுதான் சொல்ல வேண்டும்.


தோல்விகள் என்னை புரட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் “ஏன்டா பிறந்தோம்?”
என்றதொரு  வினாவை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆழ்மனதின் அபார சக்தி என்னுள் இதன் போது வெளிப்படுத்தப்பட்டதும் என்னையறியாமலே  நடந்ததொரு  நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை” தந்தையின்  அமுத மொழி அடிக்கடி என்னை விழிப்படைய வைத்த தருணங்கள் ஏராளம்.எனது வெற்றியின் பாதிப்பகுதி தந்தைக்க சமர்ப்பணமாகத்தான் செல்ல வேண்டும் என்றால் அதை மறுப்பதற்கு எனக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“உயிர் உள்ளவரை போராடு”  எனக்கு நானே அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒன்று.ஏராளமான சந்தர்ப்பங்களில் என்னுடைய முயற்சிகளுக்க தக்கதொரு விளைவு கிடைத்ததில்லை என்றால் அது மிகைப்படுத்தப்படா உண்மையாகத்தான் இருக்கும்.எத்தனை முறை வெற்றி பெற்றேன்  என்பதைப் பற்றி நான் நினைத்ததை விட எத்தனை முறை தோற்றுப் போனேன் என்று நினைத்த தருணங்கள் தான் அதிகம்.


தோல்விகளைக் கண்டு சோர்ந்து போன காலங்ளை நினைத்துப் பார்க்கும் போது என் மீது எனக்குக் கூட ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.தோல்விகள்தான்  எனக்கு நல்லதொரு நண்பன் என்று கூறுமளவுக்கு ஏராளமான அனுபவப் பாடங்கைளை கற்றுத்  தந்திருக்கின்றது.

ஆழ்மனதை ஆட்டிப் படைக்கும்  சக்தியை சற்று அதிகரிக்கும் போதுதான் வெற்றியின் வாசணையை நுகர முடியும் என்பது எனது தனிப்பட்ட அனுபவக் கருத்து , இதனுடன் எத்தனை பேர் உடன்படுவார்கள்  என்பதுதான்  ஐயம்.

-தொடர்ந்து  கதைப்போம்-









Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...