Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

இன்னும் படிச்சு முடியலயா ??? குட்டிக் கிறுக்கல்

என்னிடம் அதிகம் பேர் கேட்கும் கேள்வி
“தம்பி நீங்க இன்னும் படிச்சு முடியலயா ??? ”

// இன்னும் கொஞ்சம் இருக்கு // இதத்தான் நானும் அஞ்சு வருசமா சொல்லிக்கிட்டு வாறன்.

“படிச்சு முடியற” எண்டா என்ன ? என்கிறதுதான் என்னன்ட பெரிய டவுட்டு

இலங்கையின் கல்வி அமைப்பானது மிகவும் நேர்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் என்னிடத்திலில்லை.

ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி அதன் பின்னர் பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி அதன் பின்னராக இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டக் கற்கைகளுடன் இணைந்தவாறான தொழில்சார் கற்கைகள் என தொடர்ச்சியாக அதன் போக்கிலேயே அது பயணிக்கின்றது.

35% (சதவீத)மானவர்களின் மனநிலை என்னவென்றால் ''ஒன்று தொடக்கம் உயர்தரம்" வரையில்தான் படிப்பு என்றவாறு.

ஏஸ், ஏற்றுக்கொள்ளலாம் !!

மீதமுள்ள 65% (சதவீத)மானவர்களின் மனநிலை பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி வரையில் ஓரளவுக்கு விரிவுபடுத்தப்படுகின்றது.

ஆம், இதையும் ஏற்றுக்கொள்ளலாம் !!!

உண்மையில் ஏராளமானோருக்கு பல்கலைக்கழகத்தின் பின்னரான இரண்டாம், மூன்றாம் மற்றும் இன்னோரன்ன பட்டக்கற்கைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை போலும்.

அல்லது ஏதாவது ஒரு கற்கையை தனியார் கல்லூரியில் மேற்கொண்டு துபாயோ, சவூதியோ, லண்டனோ சென்றால் அத்துடன் கதை ஓவர் என்றவாறுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்தோனுகின்றது.

//நான் சாகுற வரைக்கும்  படிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன்// என்னா கேக்குறவங்க நம்மல ஒருமாதிரியாத்தான் பாப்பாங்க.

 “என்ன இவனுக்கு தல கில சரியில்லயோ” !! என்றுமாக வதந்திகள் காட்டுத் தீ போல பரவிவிடும் .

அதுக்குத்தான் இன்னம் கொஞ்சம் இருக்கு,  கொஞ்சம் இருக்குன்னு கூறி தப்பித்துக் கொள்வது.

என்னைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது மரணிக்கும் வரை  பயணிக்கக்கூடியது என்றே கூறுவேன்.

''Yes, its a life-long process''

அம்மா, அக்கா, அண்ணா, அப்பா, தம்பி ராசா மார்களே ! ஒண்ட மட்டும் தெளிவா புரிஞ்சுக்கொங்கோ, // படிப்புக்கு என்றய்க்குமோ முடிவில்ல // 
எங்கிற உண்மய.

----- தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக ----------































இலங்கையிலுள்ள முற்கொடுப்பனவுத் தரவுத் திட்டங்கள் ஒரு ஒப்பீடு 2014

குறிப்பு : இப் பதிவானது இலங்கையிலுள்ள இணையப் பாவனையாளர்களுக்கு நிச்சயமாக உதவக் கூடியவாறானதொன்றாகவே அமையப்பெறும். மேலும் இதன் மூலம் வினைத்திறனான தரவுத் திட்டமொன்றை தெரிவு செய்யக்கூடிய தெளிவொன்றும் உருவாகும்.

சரி,

இனி பதிவிற்குள் நுழையலாம்.

இணையப்புரட்சி என்றதொரு யுகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதனது அத்தியவசியமான தேவைகளுக்குள் இணையமும் ஒன்றாகிவிட்டது. இணையம் இன்றி  வாழ்வதற்க்கு மனிதன் தயாரில்லை என்றதொரு நிலைக்கு மனிதனது தேவைகள் அனைத்தும் இணையத்திற்குள் முடக்கப்பட்டு விட்டன என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

இது ஒரு புறமிருக்க இணையக் கட்டணங்கள் என்றதொரு விடயமும் மனிதனது பிரதான செலவினங்களுக்குள் உள்ளடக்கலாகிவிட்டது. எது எவ்வாறாயினும் இதனைத் தவிர்த்துக் கொள்ளவதென்பது சற்றுக் கடினமானதொரு காரியம் ஆனாலும் ஒப்பீட்டளவில் இதனை இழிவாக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இலங்கையில் இணையப் பாவணையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான்  செல்வதாக அண்மைய ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது ஒரு விதத்தில் சாதகமானதாக உற்று நோக்கப்பட்டாலும் மற்றொரு விதத்தில் பாதகமானதொன்றாகவே அவதானிக்கப்படுகின்றது.

எடிசலாட்(Etisalat), டயலொக்(Dialog), மொபிடெல்(Mobitel), எயாடெல்(Airtel) மற்றும் ஹச்(Hutch) ஆகிய இவ் ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள்தான் இலங்கையில் பிரதான இணையப் பங்காளர்களாகவும் வழங்குனர்களாவும் செயற்பட்டு வருகின்றன.

ஒப்பீட்டளவில் வேறுபட்ட தரவுத் திட்டங்களை/பொதிகளை (Data Plans/Packages) வழங்குவதிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களோடு தக்க வைத்துக் கொள்வதிலும் இந் நிறுவனங்கள் மிகவும் கச்சிதமாக  தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாதாரணமாகவே தரவுத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருந்த இவ் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டிற்குள் சமூக வலைத்தளங்களுக்கென்றே தனிப்பட்ட தரவுத் திட்டங்களை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு தினம் தினம் விசேட புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க,

என்னால் இங்கு ஒரு சிறிய முயற்சியாக இவ் ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்களை அதாவது முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்களை ஒப்பு நோக்கியவாறான ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட  தரவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இதன் பிரதான நோக்கம் யாதெனில் எந்த நிறுவனம் மிகவும் வினைத்திறனான தரவுத் திட்டத்தை வழங்குகின்றது என்பதாகும்.

 இதன் மூலம் இணையச் செலவினங்களை ஓரளவுக்கு இழிவாக்கலாம் என்றதொரு அடிப்படையில்தான் என்னால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவ் ஒப்பீட்டு அட்டவணையிலுள்ள தகவல்கள் அனைத்தும் நேரடியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை மேலும் இத் தகவல்கள்  அதாவது செப்ரம்பர் மாதம் 16 ம் திகதி 2014 ஆண்டுக்குரியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன (Updated Details).

ஒப்பீட்டு அட்டவணை  


தெளிவான அட்டவணைக்கு இதனை சொடுக்கவும்

இங்கு அட்டவணையில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களினதும் தரவுத் திட்டங்கள் அதனது விலைகளுக்கேற்ப ஒப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விலை வீச்சுக்கேற்ப எவ்வாறான தரவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்பதை மிகவும் இலகுவான முறையில் அவதானிக்கவும் முடியுமாகவுள்ளது.

உதவிக் குறிப்புகள் :
Prize range - விலை வீச்சு, அதாவது இங்கு மூன்று விலை வீச்சுக்குள் எல்லைப் படுத்தப்பட்ட தரவுப் பொதிகள்/திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1. ரூபா 1- 99 வரையில்
2. ரூபா 100 - 299 வரையில்
3. ரூபா 300 - 1999 வரையில்

இலகுவாக ஒப்பீட்டை மேற்கொள்ளலாம்.

Prize - விலை, அதாவது குறிப்பிட்ட தரவுத் திட்டத்தின் விலை

Data - தரவுத் திட்டம் (MB) அலகில் தரப்பட்டுள்ளது மேலும் என்னால் சில இடங்களில் GB யிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக 110+50 எனில் 110MB ஆனது பகல் பொழுதிலும் 50MB என்பது இரவுப் பொழுதிலும் பாவிக்க கூடியவாறாக உள்ளது.

SMS/Call - இதன் போது வழங்கப்படுகின்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளுர் அழைப்பு நிமிடம்.

உதாரணமாக 50/10 எனில், 50 குறுஞ்செய்திகள் மற்றும் 10 நிமிட அழைப்பு இலவசம் என்றவாறு அது  அமையப் பெறும்

Val (Validity) - செல்லுபடிக்காலம், அதாவது இத் தரவுத் திட்டமானது எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதாகும்.

உதாரணமாக : 7 என்றால் இத்தரவுத் திட்டமானது 7 நாட்களுக்குள் செல்லுபடியாகும் என்பதாகும் அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

TT - Talk Time - அழைப்பு நேரம்.

NIG - இரவு நேரத் திட்டம்

இங்கு இரவு நேரத்திட்டங்கள் பொதுவாக நள்ளிரவு 12 யிலிருந்தே ஆரம்பிக்கின்றன ஆனாலும் சில நிறுவனங்களின் திட்டங்கள் வேறுபட்ட நேரத்தில் ஆரம்பிக்கின்றன ( அதிகாலை 1 மற்றும் 2 மணியளவுகளில் ) தயவு செய்து இதனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள இணையத் தளங்களுக்குள் பிரவேசியுங்கள்.

எடிசலாட் (Etisalat) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எடிசலாட் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்






டயலொக் (Dialog) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: டயலொக் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








எயாடெல் (Airtel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: எயாடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்








 மொபிடெல்(Mobitel) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்







ஹச் (Hutch) இன் முற்கொடுப்பனவு தரவுத் திட்டங்கள் .

இணையத்தள முகவரிப் பக்கம்: ஹச் முற்கொடுப்பனவுத் திட்டங்கள்
















பேஸ்புக்கின் ஆதிக்கம் ! வரமா?? சாபமா???

 மிகவும் பிரபலமான சமுகவலைத்தளங்களில் ஒன்றுதான் பேஸ்புக்(Facebook).
2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க் சகர்பேர்க்(Mark Zuckerberg) என்பவராலும் சக நண்பர்களாலுமே இது உருவாக்கப்பட்டது.பல்கலைக்கழக நண்பர்கள் மத்தியில் கல்விசார் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் நோக்கத்திற்காகவே பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதேயன்றி வியாபார நோக்கத்திற்காகவல்லதென்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.காலப்போக்கிலே இது  விரிவுபடுத்தப்பட்டு தற்போது அதாவது இன்றைய நிலையில் பல பில்லியன் டொலர்களை இலாபமீட்டக்கூடியதொரு நிறுவனமாக வேறூன்றியிருப்பதென்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். 



நட்புவட்டத்தை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தியே பேஸ்புக்கானது தன்னை மக்களின்பால் ஈர்த்துள்ளது.நிச்சயமாக இதனால் ஏராளமான சாதமான விளைவுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்க்கு நிகரான விகிதத்தில் பாதகமான விளைவுகளுக்கும் குறைவில்லையென்றுதான் கூற வேண்டும்.இது நியுட்டனின் 3ம் விதிக்கமைய பொருத்தமானதொன்றாகவே அமையப் பெற்றுள்ளது.அதாவது ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கமுண்டு என்பதாகும்.(Every action has an equal and opposite reaction)


13 வயதிற்க்கு மேற்பட்ட எவரொருவரும் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம் என்பது பேஸ்புக் நிறுவனம் வகுத்துள்ள ஆரம்பக்கட்ட விதிமுறையாகும்.இதன் விளைவாகவே இன்று பாடசாலை மாணவா்கள் முதல் வயதானவர்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் அனைவரிடத்திலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக்கெனும் சமுகவலைத்தளம்(Social site).

குறிப்பாக அண்மைய ஆய்வறிக்கையிக் பிரகாரம் (மார்ச் 2013) பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.11 பில்லியன் என்பதுதான் ஆச்சரியமானதொரு விடயமாகும்.அதாவது நாளொன்றுக்கு 665 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 7 மாதத்திற்கு முன்னர் 1.06 பில்லியன் பாவனையாளர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது கடந்த வருடத்தை விட 27% ஆன வளர்ச்சி கண்டுள்ளது.அந்தளவுக்கு இதன் பாவனையாள்களின் எண்ணிக்கை ஆர்முடுகளில் பயணிக்கின்றது.


நாளொன்றுக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 26% ஆன வளர்ச்சி கண்டு ஆய்வாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.
மேலும் நவீன கைப்பேசிகளின் வருகையினாலும்(Smart Phones) இதனது பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருக்கின்றது.சுமார் 750 மில்லயன் மக்கள் தங்களது கைப்பேசிகளின் ஊடாவே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


வருடாந்த பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை :Source facebook Inc

1 மில்லியன்  - 2004 இறுதி
5.5  மில்லியன் -2005 இறுதி
12  மில்லியன்  -2006 இறுதி
20  மில்லியன் - ஏப்ரல் 2007 
50  மில்லியன் - ஒக்டோபர்  2007
100  மில்லியன்  - ஆகஸ்ட் 2008
150  மில்லியன் - ஜனவரி 2009
750  மில்லியன் -ஜுலை 2011
800  மில்லியன் -செப்டம்பர் 2011
845  மில்லியன்-2011 இறுதி
901  மில்லியன் -மார்ச் 2012
955  மில்லியன் -ஜுன் 2012
1.01 பில்லியன் -செப்டம்பர் 2012
1.06 பில்லியன் -டிசம்பர் 2012
1.11 பில்லியன் -மார்ச் 2013


தற்போது சந்தையில் பலகையான ஸ்மாட் கைப்பேசிகளில்(Smart Phones) பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) நிறுவப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விளைவாக பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் வியாபார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
அன்ரொயிட் கைப்பேசிகள்(Android phones), வின்டோஸ் கைப்பேசிகள்(Windows phones) , ஜாவா கைப்பேசிகள்(Java phones) போன்றன தற்போது சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற கைப்பேசிகளாகும்.
மேலும் இவற்றில் சமுக வலைத்தளங்களுக்கென்று தனியானதொரு இடமொதுக்கப்பட்டுள்ளது.அதாவது பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) என்ற பெயரில், இதன்மூலமே இலகுவாக பேஸ்புக்கின் பாவனைனையை மேற்கொள்ள முடியுமாகவுள்ளது.


பேஸ்புக்(Facebook), டுவிட்டர(Twitter), கூகில் பிளஸ்(Google Plus), லிங்ட் இன்(Linked in) போன்றன மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளங்களாகும்.இதிலும் குறிப்பாக பேஸ்புக்கானது தனது ஆதிக்கத்தை முதன்மைப் படுத்தியிருக்கின்றது என்பதே விசேட அம்சமாகும்.
பேஸ்புக்கானது வருடமொன்றுக்கு பல பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டிக்கொண்டிருக்கின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.எவ்வாறு பேஸ்புக்கானது இலாபமீட்டுகின்றது என்பது பற்றியதொரு ஐயப்பாடொன்றும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
CTR (((((((((Click Through Rate) என்ற முறையின் அடிப்படையிலே பேஸ்புக்கானது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுகின்றது.குறிப்பாக இது விளம்பரங்கள் மூலமே சாத்தியமாக்கப்படுகின்றது.உண்மையில் விளம்பரங்கள் இல்லாவிட்டால் பேஸ்புக்கின் கதி பரிதாபத்திற்குள்ளானதொன்றாக மாறிவிடும்.


பாவனையாளருக்கு பல்வேறு வசதிகளை புதுப் புது வடிவில் அறிமுகப்படுத்தி தொடர்ந்தும் தன்னோடு இணைத்து வைத்து கொண்டிருப்பதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான் என்றால் அதற்கான மாற்றுக் கருத்துக்கள் குறைவாகத்தான் இருக்கும்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவே (facebook page) தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.உண்மையில் இது பெருமளவில் மக்கள் மத்தியில் சென்றடைவதே சிறப்பியல்பாகும்.பிரபலமான நிறுவனங்கள் முதல் சிறியளவிளான நிறுவனங்கள் வரை அனைவருமே தங்களுக்கென்று பேஸ்புக் பக்கத்தினை உருவாக்கி அதனை வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும் பிரபலமடையச் செய்கின்றன.மேலும் இணையத்தள வியாபாரத்திற்க்கு (E-Business/Online Business) பேஸ்புக்கானது ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை எவரொறுவராலும் மறுக்க முடியாது.


பேஸ்புக்கானது பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டினைந்து தனது பங்குகளை முதலீடு செய்வதன் மூலமாகவும்  பெருமளவான இலாபத்தை ஈட்டிக் கொள்கின்றது.
பேஸ்புக்கின் வருகை இணையத்தின் மற்றுமொரு புரட்சியென்றே இணையத்தள ஆய்வாளர்களினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.அந்தளவுக்கு அதன் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது.உண்மையில் இது மக்களுக்க வரமா? சாபமா? என்றதொரு வினாவும் எழுப்பப்படுகின்றது.
ஒரு நாணயத்திற்க்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல பேஸ்புக்குக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன அதாவது சாதகமான பக்கம் மற்றும் பாதகமான பக்கம் போன்றவையாகவே அவை அடையாளப்படுத்தப்படுகின்றன.
நேரவிரயம், கல்விச் சீர் குலைவுகள், ஆபாச நடவடிக்கைகள், இணையத்தள மோசடிகள், போலி நட்பு வட்ட மோசடிகள் என்றே இதனது பாதகமான பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றன. இதனை பேஸ்புக்கினால் மறுக்கவும் முடியாது , எந்தவொரு மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது என்பதே நாம் யாவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக்கானது பல்வேறு சாதகமான விளைவுகளுக்கே தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தே சாதக, பாதக விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்ற கருத்தையும் மறுக்க முடியாது.இதன் அடிப்படையில் உண்மையில் இது மக்களுக்கு கிடைத்ததொரு வரமாகத்தான் என்னால் உற்று நோக்கப்படுகின்றது.




Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...