Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

அடுத்த பில்கேட்ஸ் நீங்களா???

உங்களிடம் நம்பிக்கை, விடாமுயற்சி,  கடின உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகள் போன்றவை காணப்படுமாயின் நீங்கள்தான் அடுத்த  பில்கேட்ஸ் என்று உங்களிடம் பொய் சொல்லி நான் உங்களை உசுப்பியெல்லாம் விட மாட்டேன்.


உலகிலுள்ள ஏராளமானவர்களிடத்தில் நான் மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன என்பதும் அதற்கான காரணமாகும். 

ஆம், தற்போது இவ்உலகில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கத் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். அதேபோல் புதிய மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

ஆனால் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்தால்,

பெரும்பாலானவர்களிடத்தில் பெரிய கனவுகளோ, அதனை செயற்படுத்துவதற்குரிய போதுமான நீண்ட காலத் திட்டமிடல்களோ இல்லை என்பதுதான் விடயமாகும்.

குறுகிய கால சிறிய இலக்குகளை நோக்கி குறிவைத்திருக்கும் இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கிய கனவுகள் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களின் பில்கேட்ஸ் கனவுகளுக்கு முதல் தடையாக அமைந்து விடுகின்றது.

கிழக்காசிய நாடுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து அதனுடன் தொடர்பானதொரு துறையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் இணைந்து கைநிறைய சம்பாதிப்பதனையே அவர்களது வாழ்நாள் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மையாகும். 

அதிலும் குறிப்பாக தொழிநுட்பத் துறையை தெரிவு செய்து ஏதோ ஒரு அளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் வீட்டில் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து ஐயம் செட்டில்ட் டவுன் என்று கூறிக்கொண்டும் திறிகிறார்களாம்...

இதை தவரென்றோ அல்லது இவர்கள் இலட்சியமற்றவர்கள் என்றோ யாராலும் குறை கூற முடியாது.

ஆனால், இவர்கலெல்லாம் அடுத்த பில்கேட்ஸ் அளவுக்கு யோசிப்பார்களேயானால் அதுதான் அவர்களின் வாழ்நாள் முட்டாள் தனம் என்று என்னால் கூற முடியும்.

உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை  -அசிம் பிரேம்ஜி

உங்களின் பெரிய கனவுகள் தான் உங்களின் நீண்ட கால வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாகும். 

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உங்களின் கனவுகளையும் இலக்குகளையும் தீர்மானியுங்கள். 

அதனை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துங்கள். உங்களுக்கென்றே ஒரு கற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள்தான் அந்த சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ்.

உங்களின் கனவுகளுக்கு சக்தி கொடுங்கள் அதனை எவ்வாறு அடையலாம் என்று திட்டமிடுங்கள். வியூகங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பீர்கள் என்று உங்களை நம்புங்கள். அதற்கான தயார் படுத்தல்களை ஆரம்பியுங்கள். 

இவை போதும் உங்களின் பெரிய கனவுகளை நிஜமாக்குவதற்கு. 

ஒருபோதும் ஒரே இரவில் வெற்றிவாகையெல்லாம் சூட முடியாது. அதாவது ஓவர் நைட் சக்ஸஸ் (Overnight Success) எல்லாம் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே சாத்தியமாகும்.

மாறாக, முறையான நீண்டகாலத் திட்டமிடல்கள், நம்பிக்கையான உழைப்பு, அதன் மீது மட்டில்லா ஈர்ப்பு (அல்லது அதன் மீது ஒரு வெறி) போன்றவற்றை ஒருமைப்படுத்திய யாருடைய தலையீடுமற்ற செயற்பட்டாடுகள் அவசியம்.

இதற்கு நீங்கள் தயார் எனின்,

நிச்சயமாக அடுத்த பில்கேட்ஸ் நீங்கள்தான்.

ஒரு வேளை அது நானாகக் கூட இருக்கலாம்!!!!

--பாஸ் முதல்ல உங்கள நம்புங்க, அப்புறமா அடுத்தவன நம்பலாம்--






ஒருவேளை நான் தோற்றுப் போனால் ???

“முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்ய மாட்டார்” எனும் பொன்மொழி என்னுள்  சற்று அதிகமாகவே வித்திடப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

காரணம்,
 
என்னை நான் நொந்து கொள்ளும் பல சந்தர்பங்களில் என்னுடைய இயலாமைக்கான ஒரே ஒரு  காரணமாக என்னால் அடையாளப்படுத்தப்பட்டது ------

ஒரு வேளை நான் தோற்றுப் போனால்” என்கின்ற கொடிய வியாதியாகிய “பயம்”.

இவ்வுலகில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படாமலேயே இருப்பதற்கான காரணங்களில் தலையானது “பயம்” .  ஒரு வேளை நான்  தோற்றுப் போனால் என்கின்ற பயமே, எமது பல சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடுகின்றது. 

 செய்து தோற்றுப் போவதை விட  முயற்சி செய்யாமலேயே என்னால் இது முடியாது என்று கூறி ஒதுங்கிப் போகும் மனோபாவமே எம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கின்றது. தோற்றுப் போவதென்பது ஒரு அனுபவமே அது நிச்சயம் வெற்றிக்கான அடித்தளத்தையே தரும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. 

சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னால் பயத்தின் காரணமாக முயற்சி செய்யாமல் ஒதுங்கிப் போனதொரு விடயம் ஏற்படுத்திய  இழப்புகளின் வடு இன்றும் கூட என்னை விட்டபாடில்லை. உண்மையில் அதன் வலியும் தாக்கமும்  நான் மரணிக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்பது  சத்தியமே.

முயற்சி செய்யாமலேயே,  நான் தோற்று விடுவேன் என்று நினைத்தே எம்மில் பலர் அவர்களது ஆயுளில் எந்தவொரு முயற்சியும் எடுக்காமலேயே மரணித்து விடுகின்றனர். 

ஒரு சிலரே

 “எதுவானாலும் ஒரு கை பாப்போம், என்ன உசுரா போப்போது” என்று முயற்சி செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா ?? என்பது விடயமல்ல. முயற்சி செய்கிறார்களே அதுதான் விடயம், அதுதான் என்னைப் பொறுத்தமட்டில் நிஜமான  வெற்றி.

“ஏன் நீ மற்றவனுக்கான  வாழ வேண்டும் ??? உனக்காக ஒரு நாள் வாழந்து பார் வாழ்க்கையின் ஆழம் புரியும்”. என்பதுதான்  காலம் காலமாக நம்மால் சொல்லப்பட்டு வரும் ஒரு வாழ்வியல் தத்துவம். 

உண்மையில் எம்மில் பலபேர் மற்றவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமது முயற்சிக்கு முதல் எதிரியாகவும் முட்டுக்கட்டையாகவும் அமைந்து விடுகின்றது. அடுத்தவனுக்காகவே வாழ்ந்து  அடுத்தவனுக்காகவே  மரணிப்பதுதான் வாழ்க்கையா ?? கொஞ்சம் சிந்திக்கலாமே ???

“நான் ஒரு வேளை தோற்றுப் போனால் மற்றவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்”  என்கின்ற பய மனோபாவம்  என்னுடன் சேர்த்து பல பேரை தொற்றிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் எம்மில் பலர் அறியாத உண்மையாகும். 

இதிலிருந்து விடுபட்டு எப்போது ஒருவன் வெளியேறி விடுகிறானோ அன்றிலிருந்து அவனது வெற்றிக்கான அடித்தளம் இடப்படுகின்றது என்றுதான்  அர்த்தம். நிச்சயமாக வாழ்க்கையில் தோற்றுப் போவதென்பது ஒரு விடயமல்ல ஆனால் முயற்சி செய்யாமலேயே தோற்றுப் போவதுதான் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் களையப்பட வேண்டியதொரு விடயமாகும்.


- தொடர்ந்தும்  கதைப்போம்  இதுபோலவும் -














Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...