என்னிடம் அதிகம் பேர் கேட்கும் கேள்வி
“தம்பி நீங்க இன்னும் படிச்சு முடியலயா ??? ”
// இன்னும் கொஞ்சம் இருக்கு // இதத்தான் நானும் அஞ்சு வருசமா சொல்லிக்கிட்டு வாறன்.
“படிச்சு முடியற” எண்டா என்ன ? என்கிறதுதான் என்னன்ட பெரிய டவுட்டு
இலங்கையின் கல்வி அமைப்பானது மிகவும் நேர்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் என்னிடத்திலில்லை.
ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி அதன் பின்னர் பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி அதன் பின்னராக இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டக் கற்கைகளுடன் இணைந்தவாறான தொழில்சார் கற்கைகள் என தொடர்ச்சியாக அதன் போக்கிலேயே அது பயணிக்கின்றது.
35% (சதவீத)மானவர்களின் மனநிலை என்னவென்றால் ''ஒன்று தொடக்கம் உயர்தரம்" வரையில்தான் படிப்பு என்றவாறு.
ஏஸ், ஏற்றுக்கொள்ளலாம் !!
மீதமுள்ள 65% (சதவீத)மானவர்களின் மனநிலை பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி வரையில் ஓரளவுக்கு விரிவுபடுத்தப்படுகின்றது.
ஆம், இதையும் ஏற்றுக்கொள்ளலாம் !!!
உண்மையில் ஏராளமானோருக்கு பல்கலைக்கழகத்தின் பின்னரான இரண்டாம், மூன்றாம் மற்றும் இன்னோரன்ன பட்டக்கற்கைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை போலும்.
அல்லது ஏதாவது ஒரு கற்கையை தனியார் கல்லூரியில் மேற்கொண்டு துபாயோ, சவூதியோ, லண்டனோ சென்றால் அத்துடன் கதை ஓவர் என்றவாறுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்தோனுகின்றது.
//நான் சாகுற வரைக்கும் படிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன்// என்னா கேக்குறவங்க நம்மல ஒருமாதிரியாத்தான் பாப்பாங்க.
“என்ன இவனுக்கு தல கில சரியில்லயோ” !! என்றுமாக வதந்திகள் காட்டுத் தீ போல பரவிவிடும் .
அதுக்குத்தான் இன்னம் கொஞ்சம் இருக்கு, கொஞ்சம் இருக்குன்னு கூறி தப்பித்துக் கொள்வது.
என்னைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது மரணிக்கும் வரை பயணிக்கக்கூடியது என்றே கூறுவேன்.
''Yes, its a life-long process''
அம்மா, அக்கா, அண்ணா, அப்பா, தம்பி ராசா மார்களே ! ஒண்ட மட்டும் தெளிவா புரிஞ்சுக்கொங்கோ, // படிப்புக்கு என்றய்க்குமோ முடிவில்ல //
எங்கிற உண்மய.
----- தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக ----------