வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இலங்கைத் தமிழில் சொன்னால் “சட்டப்படியாக இருக்கு மச்சான்” என்று சொல்லுமளவுக்கு  திரைப்படம் பிரமாதமாக  செதுக்கப்பட்டிருக்கின்றது. சிவகார்த்திகேயனுக்கென்றே அமையப்பெற்ற கதையம்சம்கூடியதொரு திரைப்படமாகத்தான்  பொன்றாம் இதை  தயாரித்திருப்பாரோ என்னவோ ?? என்று கூட கேட்கத் தோனுது. 



சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் “ SIMPLY  SUPERB"...... அதாவது சரியான விகிதத்தில் காரம் , மசாலா மற்றும் மொளகாப்பொடி போன்றவை சேர்ந்ததொரு கலவையாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

சத்தியராஜின் வழக்கமான அசத்தலான  நடிப்பு  படத்தின் வெற்றிக்கான ஒரு காரணியென்றும் கூறலாம் . இதில் இவருக்கு சீரியஸான ஜோக்கர் பாத்திரம். சும்மா பிண்ணியிருக்கிறாரு  மனிசன்.சிவனான்டி ன்னா ஊருக்குள்ள  பயம் ஆனா மனிசன்  உள்ளுக்குள்ள செம ஜோக்கர். இதை கிளைமக்ஸிலேயே போட்டு உடைத்திருக்கிறாரு  பொன்றாம். இதுதான் படத்துக்கு இன்னும் கொஞ்சம் மேலதிக பலத்தையும்  சேர்த்திருந்தது.


அண்மைக்காலமாக  தமிழில் வெளியான பல திரைப்படங்கள் என்னைப் போன்ற ரசிகர்களை ஏமாற்றினாலும் , வருத்தப் படாத வாலிபர் சங்கம் அவற்றையெல்லாம் ஈடு செய்வதற்கான முயற்சியாகத்தான் இருக்குமோ என்னவோ ?? என்று கூட என்னத் தோனுகின்றது. இதற்காக மீண்டும் ஒரு முறை பொன்றாமுக்கு  நன்றி  சொல்லக் கடமைப்  பட்டுள்ளோம்.

சிரிப்புக்கு பஞ்சமில்லாமலும்  விருவிருப்புக் குறையாமலும் எந்தவொரு ஆபாச காட்சிகளுக்கும்  இடங்கொடுங்காமலும்  தரமான படைப்புக்ளை தமிழ் சினிமாவிலும் படைக்க முடியும் என்பதற்க்கு  வருத்தப்படாத வாலிபர் சங்கம்  ஒரு முன்னுதாரனமாகுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

சூரி யைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் ,தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை  நடிகர்களில் சூரியும் ஒருவர் .தனக்கு எது வழங்கப்பட்டிருக்குதோ அதற்க்கு ஏற்றால் போல் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய திறமை இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இதில் இவர் சிவா வுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் உண்மையிலேயே “செமயாயிருக்கு”. கோடி என்ற பாத்திரத்தில் கேடியாக நடிச்சிருக்காரு தம்பி. 


ஏய் !! சிவா , அந்தப் புள்ள பாவம் யா  “சிறி திவ்யா” . தமிழில் இதுதான் முதல் படம்  அதிலேயே சும்மா பிண்ணியிருக்கா ! Superb Acting என்று கூடச் சொல்லலாம் , சிவாவுக்கு ஈடு கொடுத்து அசத்தியதன் மூலம் பல இளைஞர்களின் மனதில் தனியிடம் இவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கசிகின்றன.


“வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  பாடல் மூலம் தனக்கு பாடவும் தெரியுமுடா !! என்று கூறுகின்றார்  நம்முட சிவாத் தம்பி . டி.இமான் கச்சிதமாக  காயை நகர்த்தியிருக்கிறார் என்று கூடச் சொல்லாம் . அனைத்துப் பாடல்களுமே கேட்கக் கூடியவாருதான்  இசை அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஊதாக்கலரு ரிப்பனு பாடல், #NICEsong தற்போது அனைவரிடத்திலும் முனு முனுக்கப் படக் கூடிதொன்றாகவே இருக்கின்றது. பல பேரின் ரிங்கிங் டோனாகவும் தான்.

போஸ் பாண்டி-சிவா , லதா பாண்டிக்கு- சிறி திவ்யா  விடம்  டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுக்கச் சொல்லும் காட்சி பிரமாதம் . என்னை வெகுவாக ஈர்த்த காட்சிகளில் அதுவும் ஒன்று.

கதை  வழமையான கதையாக இருந்தாலும்  அதனை  நகர்த்தியிருக்கு விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய  தொன்றாகும். அதிலும் இறுதிக் காட்சி சற்று வேறுபட்ட கோணத்தில் நகர்த்தப்பட்டு  திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

ஆக மொத்தத்தில் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவ்வருட தமிழ் சினிவாவில் தனக்கென்றதொரு தனியிடத்தை பிடித்துக் கொள்ளக் கூடியதொரு திரைப்படமாகப் பதிவாகும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை !












நான் கணனி கற்ற கதை .......

இற்றைக்கு சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தான் என்னுடைய  கணனியுடனான பயணம் ஆரம்பமானது.அப்போது வயது 10.  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறைவு செய்த கையோடு எங்கள் ஊறில் உள்ள கணனி வகுப்புக்களை நடாத்துவதற்கென்று பிரபலமான கல்லூரியொன்றின் கணனிப் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுமாரும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்பாவின் முயற்சியால்தான் ஒரு வருட இலவச கணனி வகுப்புக்கான பரீட்சையில்   தேறக்கூடியதொரு வாய்ப்பும் கிட்டியது. அங்குதான் என்னுடைய கணனிக்கல்விக்கான அடித்தளம்  இடப்பட்டதென்பதுதான் உண்மையும் கூட. 

அது நாள் வரைக்கும்  நான் கணனியை  எவ்விடத்திலும் ஆசைக்குக் கூட கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும். முதலாவது கணனி வகுப்பு , Introduction to Computer என்ற தோறனையில்தான்  ஆசிரியர் வந்து வகுப்பை நடத்தி விட்டு , நாளைக்கு Practical Class இல் பார்ப்போம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்  . எனக்கோ உள்ளுக்குள் பெரியதொரு குஷி , நாளைக்கு நாம எப்புடியாச்சும் computer ஐ தொட்டுப் பாத்திடலாம் என்ற நம்பிக்கைதான்  அந்த மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்திருக்குமென்று இப்போது நினைக்கத் தோனுகின்றது. 


முதன் முதலாக கணனியை நேரடியாகக் கண்ட சந்தர்ப்பம் , வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதொரு திருப்தியைத் தந்தது. வெள்ளைக் களரில் பெரிய TV ஒன்றும் , அதுக்குப் பக்கத்தில் பெரியதொரு பெட்டி வடிவிலான பொருள் ஒன்றும் மேசையில் ஏதோ கொஞ்சம் நீளமாக ABCD....... என்றவாறு ஆங்கில எழுத்துக்கள நிறைந்த பொருளொன்றும் , உருண்டையாக வயருடன் இணைக்கப்பட்ட பொருளொன்றுமாக , அங்கு வைக்கப்பட்டிருந்தன.இவற்றையெல்லாம் அதற்க்கு முன்னர் நான் எங்குமே கண்டது கிடையாது.

ஆசிரியர் “  Students இதுதான் கம்பியூட்டர்  !  இது மொனிட்டர் , இது CPU , இது கீ போட் , இது MOUSE என்றவாரு ஒவ்வொன்றாக விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார் , நானும் ஆசைக்கு ஒரு தரம் அவற்றையெல்லாம் தொட்டுப் பார்த்து விட்டிருந்தேன்.

மேலும் எவ்வாரு தட்டச்சு செய்வது என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டது , கறுப்பான திரையில் வெள்ளைக்களரில் எழுத்துக்கள இருக்கும் அதைப் பார்த்து வேகமாக ரைப் செய்ய வேண்டும் என்றும் வேகமாகவும் பிழையின்றியும் அதை செய்யும் போது அதிக புள்ளிகள் வழுங்கப்படும் என்றுமாரு கூறி தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கணனிகள் வழங்கப்பட்டு ரைப் செய்யுமாரும் கூறப்பட்டது. எனக்கோ , அதுதான் முதல்முறை கணனியை தொட்டுப் பார்ப்பதும் என்பதால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு வழியாக பயத்துடன் ரைப் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தாக தேடிக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது , அந்தக்கணத்தை ஒருபோதுமே மறக்க முடியாது.

இங்கு , எத்தனை பேருக்கு DAVE கேம் ஞாபகம் இருக்குமென்று எனக்குத் தெரிய வில்லை , ஆனால் நான் கணனியில் முதன் முதலில் விளையாடிய விளையாட்டென்றால் அது DAVE game தான். 

Introduction to Computer . MS-DOS . என்றவாருதான் எனது கணனிக்கற்றல் ஆரம்பமானது. அங்கு காணப்பட்ட பெருப்பாலான கணனிகளில் DOS இயங்கு தளமே நிறுவப்பப்பட்டிருந்தது. ஒரு சில கணனிகளில் வர்ணத்திரைகளாக (Colour SCREEN)  காணப்பட்டன , அதில் சிலர் ,  எங்களை விட மூத்த மாணவர்கள் எதையோ வரைந்து கொண்டும் நிறந்தீட்டிக் கொண்டுமாக சீரியசாக வேலைசெய்துகொண்டிருந்தனர். ( Drawing and Painting ). அதுதான்  Paint Programme என்றும் அதில் நீங்கள் விரும்பியவாரு படங்கள் வரைந்தும் நிறந்தீட்டியும்  விளையாடலாம் எனறவாரு எங்களது ஆசிரியர் அறிவுருத்தினார்.

இவ்வாறாகத்தான் எனது கணனிப் பயணம் ஆரம்பமானது.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-













Can anyone become a journalist? What tips would you give someone who wants to be a journalist???

From my point of view , anyone can be a journalist , but it is not a very easy task. Also , anyone can declare himself or herself as a journalist , and now most of the people doing journalism via online
( Internet ). It means, e-journalism as blogger, word-press , tumbler and other blogging sites. Even though social medias are being utilized as a journalism tool- facebook , twitter , Google+ , LinkedIn and etc.

Journalism is one of the most significant field in the world which is also recognized as the backbone of mass-media. But setting to be a professional journalist , a person who is paid to do journalism work-something is very difficult task.

As well as, a journalist should have some qualities and personal characteristics , in order to doing his career very successfully. Physical and mental health , very good command of English , good educational background , having responsible , knowledge of many subjects , it means-history , science , politics , and technology  because journalist deal with so many different topics on public importance also should take advantage of every educational opportunities , are also expected qualities and characteristics for a good journalist.

In addition , if a person who wants to be a journalist who should become a keen observer. This is also emphasized as one of the very crucial characteristics for a journalist. A person also strives to learn from the environment through his keen observation of his continuous activities maybe from working place(office) , studying place (University / Institute ) , home environment and etc. Always , his observation  and perception should be in different ways from other people , is important.

To the same extent , a journalist must be a good reader. day-by-day he should keep on reading skills in various aspects , and build up his vocabulary too , also it will take him up and enrich his knowledge of english. News papers , magazines , journals , tabloids , and internet ( blogs and websites ) are the sources of expanding the skills of reading. As well as , not to be limited the ares of reading, also whatever is good for reading should be read and absorb some kind of knowledge from that. Also it is perceived as one of the invaluable skills for a person who wants to be a journalist.

Even though , nowadays computer literacy is too necessary to a journalist. At-least , he should have some knowledge and skills on Ms-office package - Ms-word , Ms-power point , Ms-excel and etc , as well as Internet and email operations that will assist him to doing journalism tasks in very effective way , indeed. Also some journalist have some outstanding knowledge and skills on information and communication technology (ICT) for running some stunning blogs as their diary and other formal and informal purposes , also making extra decent income from that kind of blogging activities by advertising - Goggle ad senses and other affiliates advertisers.

In fact , journalist is a person who should create himself as resourceful person who has the highest degree of responsibility in the society , delivering very extreme output. In such an effective and efficient way. Thus , he should expand his thoughts into be imaginative manner. Creativity mind is an another vital stuff for a journalist. Henceforth , by doing some physical and mental ways as meditation and yoga are identified as such prominent extent.

Making the comfortable environment almost good for a journalist  in terms of  , expanding contacts. journalist always strives to build up extremely strong bond with people in order to , absorb enormous and significant information from them. Limited contacts is not good for a person who wants to be a journalist too. Always, making better communication with the people from bottom to top level hierarchy , maybe office, universities, institutes , homes and etc are identified the contacts for getting more invaluable information.

Also , ultimately from my last point of view on this scenario which has been denoted , as well as a person who wants to be a journalist should keep on writing , also. It is too one of the most crucial skills for a journalist. Although, some sophisticated journalists are good writers but not all. Spontaneously , a person can not be a good writer but he can strives to become good writer by very good writing practices. In fact , if a person  is a good reader definitely will become a good writer too . Writing skills is not something inborn ability , however , most of the prominent writers were very good readers , as well as who were not from writing family but anyhow , they achieved by their way of good writing styles. Also , I would like to claim as a good and ultimate tip to a person who wants to b a journalist should stimulate his writing pace , skills and knowledge will definitely assist him in order to overcome difficulties when takes down notes at conferences , meeting and other events which related to news or collecting information precisely for delivering clear and concise journalism task very effectively and successfully.
















நேர்முகப்பரீட்சையில் டுவிட்டர் !!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு  மீண்டும் ஒரு பதிவையே இங்கு பதிவிக்கிறேன்.அண்மையில் நோ்முகப்பரீட்சையொன்றுக்காக  சென்றிருந்தேன்.உண்மையில் , அது ஊடக அமைச்சின் பதவியொன்றுக்காகவே நடைபெற்றது.ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளுமை மற்றும் ஊடகத் தகைமைகள்  போன்றன தகுதிகளாக வினவப்பட்டன.அட, சும்மா போய்ப் பார்ப்போம் என்ற உள் மனதின் வேண்டுகோளுக்கிணங்கவே போக வேண்டிதாயிற்று.அன்று மழை வேறு ”சோவென” பெய்து கொண்டிருந்தது.ஒருவாறாக இடத்தையும் கண்டுபிடித்து சென்றாகிவிட்டது.

வரவேற்பறையில் , இரண்டாவது மாடிக்குப் போகுமாறு உத்தரவிடப்பட்டது.அங்கு நான் மட்டும் தான் சென்றிருந்தேன் , முதலாம் நபராக என்று நினைக்கிறேன்.சரி, எதுவானாலும் பார்ப்போம் என்றெண்ணிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து அழைக்கும் வரை காத்திருந்தேன்.

உள்ளே அழைக்கப்பட்டேன், பொதுவாக, அரச நிறுவனங்களில் பனல் இன்டவியுக்கள் தான் மேற்கொள்ளப்படும்.அதற்கமைய,இதுவும் அவ்வாறுதான் அமைந்தது.மூன்று பேர். ஒரு ஆண், இரண்டு பெண்கள்.

குட் மோனிங் !  என்று வாயிலிருந்து  கொஞ்சம் மரியாதை கலந்த காலை வணக்கம் சொல்லப்பட்டது, என்னால் மூவருக்கும் பொதுவாக. Please sit down , அமரும் படி கூறப்பட்டது.குட் யு பிலீஸ் கிவ் மீ யுவர் சிவி??? , ஆண் குரல். யார், சுவர்??? என்று இழுத்துக் கொண்டு சீவியை நீட்டினேன்.

ஆர் யு ஏ பிரிலான்ஸ் ஜேர்னலிஸ்ட்?? , முதலாவது வினா வினவப்பட்டது என்னிடம்.நானும் பதிலுக்கு yes sir, i'm also be a freelance Journalist. என்று கூறிவிட்டேன்.பின்னர்,அடுக்கடுக்காக கேள்விக்கனைகள் என்னை நோக்கி வீசப்பட்டன. நானும், பதிலளித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சம் பதட்டமாக.வழமையாக எல்லாருக்கும் ஏற்படும் ஒன்றுதானே பதட்டம் .

ஒரு மாதிரியாக, எல்லாவற்றுக்குமாக பதில் கூறிவிட்டிருந்தேன்.ஆனால் திருப்தியில்லை.இறுதியாக , We'll have to be shortlisted , Although if you select, we'll conduct you as soon for the second round of interview with our secretary. என்று கூறப்பட்டது ஆண் குரலினால்.நானும் பதிலுக்கு, OK sir, thank you so much, have a nice day for you.என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

பின்னர் அடுத்த நாள் ஐந்து மணி போல ஒரு அழைப்பு  எனக்கு : Mr........... Could you please come for a second interview with our secretary  on tomorrow at 10 a.m ??? Yes, Mam !! I'll be there on time, thank you so much. bye என்றவாரு உரையாடல் நிறைவுற்றது.

இப்போது, மனதில் ஒரு மகிழ்ச்சி கலந்த பயம். என்ன நடக்கப் போகின்றது நாளை?? என்ற வினாவுக்கான சபலமே அது.

அடுத்த நாள் காலை, நேர காலத்தோடு  தயாராகியிருந்தாலும், வாகன நெரிசல் தாமதப்படத்தி விட்டது.நடப்பது நடக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு  secretary office  க்கு சென்ற போது எனக்கு முன்னதாக வந்திருந்த நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் ஒரு வித Interview க்கான டென்ஸனுடன்.அவர்களைக் கண்டவுடன் கனவுகள்  கலைக்கப்பட்டது போன்றதொரு உணர்வு , தெரிவு செய்யப்படுவேனா ??? இல்லையா ???? என்ற குழப்பத்துடன்.

ஒருவாறாக என்னை சுதாகரித்துக்கொண்டு  நானும் அமர வேண்டியதாயிற்று அவர்களுடன்.பின்னர் ஒவ்வொருவறாக சென்றுகொண்டிருந்தார்கள் என்னைத் தாண்டியவாரு.

இறுதியாக நானும் அழைக்கப்பட்டேன் , விசாலமான அறை ! CCTV  கமராவினுடைய காட்சிகள் ஒரு பக்கமாக திரையில். மேசையில் ஒரு லப்டொப் , May i come sir?? Good Morning sir, மீண்டும் மரியாதை கலந்த  வணக்கம் என்னிடமிருந்து. You Mr................ !!! " Yes, sir !! I'm................... என்றவாரு மீண்டும் கேள்விக்கணைகள் கொஞ்சம் காரசாரமாக. 

அதில் ஒரு கேள்வி இவ்வாறாக : Do you have a twitter account ???? what is the ID of that ????? "Yes, sir !! But, i running that one of  another name sir, not mine  !!! #..........................


அவ்வளவுதான் , இன்டர்வியு பினிஸ்ட் !!! Ok, Thank you, Mr.................... for coming to this interview, as well  Mr..................... we'll conduct you again, if you select.

இப்போ நான் waiting...................................................!!!! ----done----





















பேஸ்புக்கின் ஆதிக்கம் ! வரமா?? சாபமா???

 மிகவும் பிரபலமான சமுகவலைத்தளங்களில் ஒன்றுதான் பேஸ்புக்(Facebook).
2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க் சகர்பேர்க்(Mark Zuckerberg) என்பவராலும் சக நண்பர்களாலுமே இது உருவாக்கப்பட்டது.பல்கலைக்கழக நண்பர்கள் மத்தியில் கல்விசார் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் நோக்கத்திற்காகவே பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டதேயன்றி வியாபார நோக்கத்திற்காகவல்லதென்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.காலப்போக்கிலே இது  விரிவுபடுத்தப்பட்டு தற்போது அதாவது இன்றைய நிலையில் பல பில்லியன் டொலர்களை இலாபமீட்டக்கூடியதொரு நிறுவனமாக வேறூன்றியிருப்பதென்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும். 



நட்புவட்டத்தை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தியே பேஸ்புக்கானது தன்னை மக்களின்பால் ஈர்த்துள்ளது.நிச்சயமாக இதனால் ஏராளமான சாதமான விளைவுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்க்கு நிகரான விகிதத்தில் பாதகமான விளைவுகளுக்கும் குறைவில்லையென்றுதான் கூற வேண்டும்.இது நியுட்டனின் 3ம் விதிக்கமைய பொருத்தமானதொன்றாகவே அமையப் பெற்றுள்ளது.அதாவது ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கமுண்டு என்பதாகும்.(Every action has an equal and opposite reaction)


13 வயதிற்க்கு மேற்பட்ட எவரொருவரும் பேஸ்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கலாம் என்பது பேஸ்புக் நிறுவனம் வகுத்துள்ள ஆரம்பக்கட்ட விதிமுறையாகும்.இதன் விளைவாகவே இன்று பாடசாலை மாணவா்கள் முதல் வயதானவர்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் அனைவரிடத்திலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக்கெனும் சமுகவலைத்தளம்(Social site).

குறிப்பாக அண்மைய ஆய்வறிக்கையிக் பிரகாரம் (மார்ச் 2013) பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1.11 பில்லியன் என்பதுதான் ஆச்சரியமானதொரு விடயமாகும்.அதாவது நாளொன்றுக்கு 665 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 7 மாதத்திற்கு முன்னர் 1.06 பில்லியன் பாவனையாளர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது கடந்த வருடத்தை விட 27% ஆன வளர்ச்சி கண்டுள்ளது.அந்தளவுக்கு இதன் பாவனையாள்களின் எண்ணிக்கை ஆர்முடுகளில் பயணிக்கின்றது.


நாளொன்றுக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 26% ஆன வளர்ச்சி கண்டு ஆய்வாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது.
மேலும் நவீன கைப்பேசிகளின் வருகையினாலும்(Smart Phones) இதனது பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருக்கின்றது.சுமார் 750 மில்லயன் மக்கள் தங்களது கைப்பேசிகளின் ஊடாவே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


வருடாந்த பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை :Source facebook Inc

1 மில்லியன்  - 2004 இறுதி
5.5  மில்லியன் -2005 இறுதி
12  மில்லியன்  -2006 இறுதி
20  மில்லியன் - ஏப்ரல் 2007 
50  மில்லியன் - ஒக்டோபர்  2007
100  மில்லியன்  - ஆகஸ்ட் 2008
150  மில்லியன் - ஜனவரி 2009
750  மில்லியன் -ஜுலை 2011
800  மில்லியன் -செப்டம்பர் 2011
845  மில்லியன்-2011 இறுதி
901  மில்லியன் -மார்ச் 2012
955  மில்லியன் -ஜுன் 2012
1.01 பில்லியன் -செப்டம்பர் 2012
1.06 பில்லியன் -டிசம்பர் 2012
1.11 பில்லியன் -மார்ச் 2013


தற்போது சந்தையில் பலகையான ஸ்மாட் கைப்பேசிகளில்(Smart Phones) பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) நிறுவப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விளைவாக பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் வியாபார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
அன்ரொயிட் கைப்பேசிகள்(Android phones), வின்டோஸ் கைப்பேசிகள்(Windows phones) , ஜாவா கைப்பேசிகள்(Java phones) போன்றன தற்போது சந்தையில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற கைப்பேசிகளாகும்.
மேலும் இவற்றில் சமுக வலைத்தளங்களுக்கென்று தனியானதொரு இடமொதுக்கப்பட்டுள்ளது.அதாவது பேஸ்புக் அப்ஸ்(Facebook Apps) என்ற பெயரில், இதன்மூலமே இலகுவாக பேஸ்புக்கின் பாவனைனையை மேற்கொள்ள முடியுமாகவுள்ளது.


பேஸ்புக்(Facebook), டுவிட்டர(Twitter), கூகில் பிளஸ்(Google Plus), லிங்ட் இன்(Linked in) போன்றன மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமுக வலைத்தளங்களாகும்.இதிலும் குறிப்பாக பேஸ்புக்கானது தனது ஆதிக்கத்தை முதன்மைப் படுத்தியிருக்கின்றது என்பதே விசேட அம்சமாகும்.
பேஸ்புக்கானது வருடமொன்றுக்கு பல பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டிக்கொண்டிருக்கின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.எவ்வாறு பேஸ்புக்கானது இலாபமீட்டுகின்றது என்பது பற்றியதொரு ஐயப்பாடொன்றும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
CTR (((((((((Click Through Rate) என்ற முறையின் அடிப்படையிலே பேஸ்புக்கானது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுகின்றது.குறிப்பாக இது விளம்பரங்கள் மூலமே சாத்தியமாக்கப்படுகின்றது.உண்மையில் விளம்பரங்கள் இல்லாவிட்டால் பேஸ்புக்கின் கதி பரிதாபத்திற்குள்ளானதொன்றாக மாறிவிடும்.


பாவனையாளருக்கு பல்வேறு வசதிகளை புதுப் புது வடிவில் அறிமுகப்படுத்தி தொடர்ந்தும் தன்னோடு இணைத்து வைத்து கொண்டிருப்பதில் பேஸ்புக்கு நிகர் பேஸ்புக்தான் என்றால் அதற்கான மாற்றுக் கருத்துக்கள் குறைவாகத்தான் இருக்கும்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஊடாகவே (facebook page) தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.உண்மையில் இது பெருமளவில் மக்கள் மத்தியில் சென்றடைவதே சிறப்பியல்பாகும்.பிரபலமான நிறுவனங்கள் முதல் சிறியளவிளான நிறுவனங்கள் வரை அனைவருமே தங்களுக்கென்று பேஸ்புக் பக்கத்தினை உருவாக்கி அதனை வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும் பிரபலமடையச் செய்கின்றன.மேலும் இணையத்தள வியாபாரத்திற்க்கு (E-Business/Online Business) பேஸ்புக்கானது ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை எவரொறுவராலும் மறுக்க முடியாது.


பேஸ்புக்கானது பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டினைந்து தனது பங்குகளை முதலீடு செய்வதன் மூலமாகவும்  பெருமளவான இலாபத்தை ஈட்டிக் கொள்கின்றது.
பேஸ்புக்கின் வருகை இணையத்தின் மற்றுமொரு புரட்சியென்றே இணையத்தள ஆய்வாளர்களினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது.அந்தளவுக்கு அதன் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது.உண்மையில் இது மக்களுக்க வரமா? சாபமா? என்றதொரு வினாவும் எழுப்பப்படுகின்றது.
ஒரு நாணயத்திற்க்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல பேஸ்புக்குக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன அதாவது சாதகமான பக்கம் மற்றும் பாதகமான பக்கம் போன்றவையாகவே அவை அடையாளப்படுத்தப்படுகின்றன.
நேரவிரயம், கல்விச் சீர் குலைவுகள், ஆபாச நடவடிக்கைகள், இணையத்தள மோசடிகள், போலி நட்பு வட்ட மோசடிகள் என்றே இதனது பாதகமான பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றன. இதனை பேஸ்புக்கினால் மறுக்கவும் முடியாது , எந்தவொரு மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது என்பதே நாம் யாவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக்கானது பல்வேறு சாதகமான விளைவுகளுக்கே தன்னை அர்ப்பணித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தே சாதக, பாதக விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்ற கருத்தையும் மறுக்க முடியாது.இதன் அடிப்படையில் உண்மையில் இது மக்களுக்கு கிடைத்ததொரு வரமாகத்தான் என்னால் உற்று நோக்கப்படுகின்றது.




வேட் பிரஸ் மற்றும் புளக்கர்


பதிவுத் தளங்களாக தங்களை அடையாளப்படுத்திய இரண்டு வேறுபட்ட தளங்களாக வலம் வந்து கொண்டிருப்பவையென்றால் அவை புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகியவை என்றுதான் கூற வேண்டும்.உண்மையிலேயே இவை இரண்டுமே மிகவும் சிறந்த பதிவுத் தளங்களாக பதிவாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மையும் கூட.


மாறுபட்ட கருத்துக்கள் , சிந்தனைகள் , நிகழ்கால நிஜங்கள் மேலும் பல விடயங்களை தனிப்பட்ட ரீதியாக யாருடைய தலையீடுமன்றி பதிவேற்ற வசதியளிக்கப்பட்ட தனித்துவமான இடமாகத்தான் இவை திகழ்கின்றன என்பதுதான் இதன் விசேட அம்சமாகும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்க ளுக்குமிடமில்லை.


“யாரும் கிறுக்கலாம் , எதையும் கிறுக்கலாம்” என்ற சிறந்த கொள்கையை கடைப்பிடிக்கும் பதிவேற்றுத் தளங்கள் என்ற ரீதியில் இவை தங்களுக்கென்று தனியொரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கின்றது என்பதையே வாசிப்போருக்கு கூறிக் கொள்ள வேண்டும்.

பத்திரிகையில் ஒரு கருத்தை அல்லது ஏதாவது ஒரு விடயத்தை பற்றி எழுதலாம் என்றால் அதற்கான் சந்தர்பங்கள் அனைவருக்குமே
வழங்கப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்ததொரு உண்மையாகும். இப் பாரிய குறையைப் போக்க  உருவாக்கப் பட்டவைதான் இவ்விரண்டு பதிவேற்று தளங்களுமே என்பதுதான் வெளிப்படையான உண்மையாகும்.



புளக்கர் மற்றும் வேட் பிரஸ் ஆகிய இரண்டுமே  மிகவும் சிறந்த பதிவேற்று தளங்கள்தான்  எனினும் இவை இரண்டிலும் எது மிகவும் சிறந்தது என்ற கேள்வி பலரால் பல்வேறு விதமாக கேட்கப்படுகின்றன். மனிதர்கள் வேறுபட்டவர்கள்  மனிதர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை என்றதுக்கமைய புளக்கர் தான் சிறந்தததாக என் மனதுக்குப் படுகின்றது. உண்மையில் இதில் வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும் எழலாம் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.


கருத்துச் சுதந்திரம் மற்றும்எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றுக்கு சந்தர்ப்பத் தை வழற்குவதே இவை  இரண்டினதும் பிரதான நோக்கங்களாக வெளிப்படுத்தப்படுதை  எவரொருவராலும்  இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.


ஏராளமானோருக்கு புளக்கர் தான் மிகவும் பரிச்சயமானதாகும் வேட் பிரஸ் ஐ விட என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட. இதனை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் என்னிடத்திலே ஏற்படுகின்ற ஐயப் பாடென்றும் கூறலாம்.


ஏன் உனக்கு வேட் பிரஸ் பிடிக்காதா ??? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நான் இங்கு எனக்கு வேட் பிரஸ் பிடிக்காது  புளக்கர் தான் பிடிக்கும் என்ற தொரு கருத்தை தெரிவிக்க வில்லை. என்னைப் பொறுத்த மட்டில் புளக்கர் ஆனது வேட் பிரஸ் ஐ விட ஏதோ சற்று சிறந்ததாக தோன்றகின்றது , அவ்வளவுதான்.


கருத்துக்களாகிய பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்க்கு இவை இரண்டுமே மிகவும் சிறந்த தளங்கள்தான் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களுமில்லை.

உண்மையில் எனக்கு மற்றவர்களைப் போல் பக்கம் பக்கமாக கிறுக்குவதற்கு விருப்பமில்லை ஏனெனில் அது உண்மையில் வாசிப்போருக்கு பொறுமையை இழக்கச் செய்யும் ஒரு செயலாக மாறிவிடக் கூடாது என்றதன் அடிப்படையிலேயே !


வித்தியாசமான மொழி நடையில் கிறுக்கும் போது உண்மையில் அது வாசிப்போருக்கு வேறுபட்ட அனுபவத்தை  வழங்கும் என்றதொரு கருத்து என் மனதில் பதிவிக்கப்பட்டுள்ளது , அதன் நிமித்தமே வேறுபட்ட கோணங்களில் என் பதிவுகளை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்  இது போலவும் !!!

-தொடர்ந்து கதைப்போம்-















தாய்மொழியாம் தமிழ்

எதையாவதைப் பற்றி எழுதலாம் எனும் சிந்தனையின் போதுதான் இன்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது “உலக தாய்மொழித் தினம்”. எத்தனை மொழிகளில் உரையாடினாலும் அவரவர் தாய்மொழியில் உரையாடுகின்ற போது    கிடைக்கின்ற சௌகரியம்,தைரியம்,தெளிவுத்தன்மை,நிதானம், பூரண மகிழ்ச்சி ஆகியவற்றை அளவிட முடியாது அனுபவிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ளலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.



என்னுடைய தாய்மொழி “தமிழ்” என்று எத்தனை பேர் மார் தட்டிக் கொள்கிறார்கள் என்பது என்னிடத்திலே பெரியதொரு ஐயப் பாட்டை தோற்றுவித்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும். ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு அதன் வளர்ச்சிப் போக்கு துரித கதியில் பயணித்துக் கொண்டு செல்வதே தெளிவான எடுத்துக்காட்டாகும்.


ஏராளமான நண்பா்கள் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினால் மாத்திரம் தான் அங்கிகரிக்கப் படுவோம் என்றதொரு தவறான சிந்தனைப் போக்கை கண்மூடித்தனமாக பின்பற்றி வருவது தாய்மொழியாம் தமிழுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே என் மனதில் தோன்றுகின்றது.

என்னைப் பொறுத்த மட்டில் மொழியென்பது ஒரு ஊடகமாகத்தான் உற்று நோக்கப்படுகின்றது.அதாவது ஒரு தொடர்பாடல் ஊடகம் என்றே குறிப்பிடலாம்.





தாய்மொழியை இழிவாக நினைப்பது தாயை இழிவாக நினைப்பதற்கு ஈடாகும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுவது தாயும் , தாய்மொழியும் தான் என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது..


 கட்டாயம் எப்போதும் தாய்மொழியில் தான் பேச வேண்டுமா ?? என்றதொரு வினாவை எம்மில் பலர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர். உண்மையில் உங்களது சிந்தனைப் போக்கு தவறானதாகத்தான் என் மனதில் தோன்றுகின்றது காரணம் என்னவெனில் காலத்தின் தேவைக்கேற்ப தங்களைத் தாங்கள் மாற்றிக் கொள்வதுததான் சிறந்தது என்ற கருத்தின் அடிப்படையில்.

“தழிழ் அவமானமல்ல அதுவொரு அடையாளம் என ஒரு பகுதியினரும் ச்ச்சீ   தமிழா??” என இன்னுமொரு பகுதியினரும் ஒரு மொழிக்கிடையிலேயே பிரிவினவாதத்தை உண்டாக்கும் செயலானது மிகவும் வருந்நத்தக்க தொன்றாகும்.



காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கில அறிவு இன்றியமையாததொன்றாகி விட்டதை எவரொருவராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்ப புரட்சியின் கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதில் ஆங்கிலம் தான் முதல் மொழி மட்டுமல்ல உலக மொழியும் கூட என்ற அடிப்படையில் இதன் பயன்பாட்டை இழிவாக்கவோ நிறுத்தவோ முடியாததென்பது உலகறிந்த உண்மையாகும்.

வெளிநாட்டவருடனோ அல்லது தமிழ் மொழி நன்கு பரிச்சயம் இல்லாத ஒருவருடனோ ஆங்கிலத்திலோ அல்லது குறிப்பிட்ட வேறு மொழியிலோ உரையாடுவதில் தவறில்லை ஆனால் தமிழ் நன்கு பரிச்சயமானவர்கள் ஆங்கிலதில் உரையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் எனது கருத்து. இது தாய் மொழிக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைந்து விடுகின்றது என்பது எம்மில் பலர் அறியாத உண்மையாகும்.


கூறப்போனால் கூறிக்கொண்டே போகலாம் ஏராளமான எடுத்துக்காட்டுக்களுடன் ஆனால் அதை வாசிப்போருக்கு பொறுமை இருக்குமா?? என்பதுதான் என்னிடத்திலே எழும் பெரிய ஐயப்பாடு. அதன் நிமித்தம் இப்பதிவை மிகவும் சுருக்கமாகவே கிறுக்கியிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும் ஏராளமாக-






வை-பை யை ஹெக் பன்னுவது எப்படி??


தலைப்பைப்  பார்த்தவுடனேயே  எத்தனை பேர்  இதனை ஆவேசமாக   கிளிக் பண்ணியிருப்பார்கள்  என்பதை என்னால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் நம்மில் பலர் எது இலவசமாகக் கிடைத்தாலும் அதை விரயமாக்க விரும்புவதில்லை என்ற மிகவும் நல்ல நோக்கத்தை கொள்கையாகக் கடைப்பிடிப்பவர்கள்

என்பதனால்தான்.

சரி , இனி தலைப்புக்கு வருவோம்.எவ்வாரு பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை ( wi-fi ) யை ஹெக் பண்ணுவது என்பதைப் பற்றி.மிகவும் நல்ல நோக்கம் என்பதனால் தான் இப்பதிவை நம்மவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

உண்மையில் வை-பை யை ஹெக் பண்ணுவது பெரியதொரு விடமயல்ல என்பதையும் இவ்விடத்திலே சொல்லியே ஆக வேண்டும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வை-பை யை ஹெக் பண்ணலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

                                                                                                           
WEP , WPA ,  WPA2   போன்ற  பாதுகாப்பு முறைகள்தான் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் WPA2 தான் அதி பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகின்றது. எது எவ்வாறாயினும் கள்வனுக்கு வேலி போட்டு பயனில்லையே !!

என்னடா  இவன் மொக்கைக்கு மேல மொக்கையைப் போட்டு கடுப்பேத்துறான் என்றவாரு தாங்கள் ஆதங்கப்படுவதை என்னால் உணரமுடியாமலில்லை.மேலும் இவ்விடத்திலே உங்களது பொறுமையை சோதிக்கவும் எனக்குத் துளியும் உடன்பாடில்லை என்றபடியால் விடயத்துக்கு வருகிறேன்.



இந்த உதவியை மட்டும் தான் என்னால் செய்ய முடியும் , இதைப் பயன்படுத்தி நிச்சயம் உங்களால் ஒரு வை-பை யை ஹெக் செய்ய முடியும் , இதனுடன் இன்னும் ஒரு சில காரியங்களை செய்யுமிடத்து.அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைத் தேடி அடிக்க வருவது உறுதியே !!

முழுமையான உதவிகள் தேவைப்படும் மகத்தான நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்னை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

                                                             
ஏன் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வை-பை யை ஹெக் செய்ய முனைகின்றீர்கள் ??? அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு என்று கூறிக் கொள்ளும் மோசமான முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்தானே !!??  

என்ன ??? நான் சொல்வதெல்லாம் சரிதானே ???

இப்பதிவை ஒரு நகைச்சுவை உணர்வுடனேயே கிறுக்கியிருக்கிறேன்  என்பதை பாவப்பட்ட வாசிப்போருக்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

-தொடர்ந்து கதைப்போம் இது போலவும்-

















மோட்டார் சைக்கிளும் நானும்

மோட்டார் சைக்கிள் ஆசை துளிர்விட ஆரம்பித்தது என்னுடைய பாடசாலைப் பருவத்தில்தான்.மோட்டார் சைக்கிள் என்றால் அதன் மீது அந்தளவு மோகம் என்னிடத்திலே காணப்பட்ட  காலமென்றும் கூடச் சொல்லலாம்.ஆசை இருந்ததே தவிர ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை.மற்றவருடைய மோட்டார் சைக்கிளை ஓடுவதற்கும் மனமில்லை அதனால் மோட்டார் சைக்கிளை எவ்வாரு ஓட்டுவது என்ற போதுமான அறிவு , அனுபவம் என்னிடத்திலே சற்று மந்தமாகவே இருந்தது.பாடசாலை நண்பர்களிடத்தில் ஒரு பந்தாவை தக்கவைப்பதற்காக சிறு சிறு பொய்களும் என்னிடத்திலே இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய அனுபவமாக சென்றடைந்ததை இன்று கூட என்னால் மீட்டிப்பார்க்கும் போது பசுமை கலந்ததொன்றாகவே இருக்கின்றது.

ஏழாவது கியரிலே சைக்கிளை ஓட்டினேன் ” என்ற பொய்யை இன்று நினைத்தால் கூட சிரிப்புத்தான் வருகின்றது.பாடசாலைக் காலங்களில் எவரொருவராலும் பொய் சொல்வதை தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை ஏனென்றால் அது ஆசைகளுக்கும் , பாராட்டுக்கும் ஏங்கும் பருவம் என்றதாகையால்.அதிலும் பெண்கள் சொல்லும் பொய்யிருக்கே ! அடடா சும்மா ஒரு கலக்கு கலக்கும்.பொய்யென்று தெரிந்தும் அதை நம்பும் பருவம்தான்  அதுவென்றால் அதற்கான மாற்றுக்கருத்துக்களும் குறைவாகத்தானிருக்கும்.

சொந்தமாக சைக்கிளை வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசையும் என்னை மீண்டும் ஆட்கொண்ட காலங்கள்  உயர்தரத்தின் போதுதான்.அம்மாவிடம் ஒரே நச்சரிப்பு “மோட்டர் சைக்கிள் வாங்குவது” பற்றித்தான்.“கொஞ்சம் பொறுமையா இரு !! காசு வரட்டும்” அம்மா கூறும் பதில். மனமிருக்குதே அது குரங்கை விட ரொம்ப மோசமானது.எப்படியாவது வாங்கி ஓட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னுள் உள்ளார்ந்தமாக ஓடிக்கொண்டிருந்தது.இனி என்னுடைய நச்சரிப்பு அப்பா பக்கமும் தாவியது. பாவம் அப்பா !! நான் எதை வேண்டும் என்று சொன்னாலும் முகம் சுழிக்காமல் வாங்கித்தருவதையே வழக்கமாக்கி விட்டார் நானும் அதையே அவரிடமிருந்து எதிர்பார்ப்பேன்.

“எல்லார புள்ளைகளும் சைக்கிள் ஓடுது , நம்முட புள்ளய்க்கும் ஒண்டு வாங்கிக் கொடுக்கத்தான் வேனும்” அம்மா-அப்பாவின் உரையாடல் இறுதியில் எனக்குமொரு சைக்கிளை சொந்தமாக்கியது , அப்பாவின் பணத்தில். புது சைக்கிளை ஓட்டுவதற்கு போதுமான அனுபவம் இருந்திருக்கவில்லை என்றாலும் வாங்கிய முதல் நாளே தொண்ணூறு வீதம் கற்றுக் கொண்டேன் சொந்தமாக. “முடியாதது  ஒன்றுமே இல்லை” என்ற கருத்தினது வேறூன்றலின் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பாகக் கூட இருந்திருக்கலாம் அது.

ஏதாவது ஒரு பொருள் என்னிடம் இருந்தால் அதைப்பற்றி போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டுமென்ற கொள்கையை சிறு வயது முதலே கடைப்பிடிப்பதை பழக்கமாக்கிவிட்டேன்.அதன் தாக்கம் மோட்டார் சைக்கிளையும் விட்டு வைக்கவில்லை.

அப்பாவை பின்னிருக்கையில் உட்கார வைத்து வேகமாக  ஓட்டும் போது, அப்பாவின் கண்டிப்பான கருத்துக்களை ஏனோ , தானோ என்றுதான் கேட்டது மனம். “மெதுவாக ஓட வேண்டும் , ஒவ்வொரு சந்திக்கும் ஹோன் அடிக்க வேண்டும், மேலும் பல காரசாரமான அட்வைஸ்கள்”.ஏன்டா??  இவரை  ஏத்தினோம் என்று கூட நினைத்ததுண்டு சில நேரங்களில். மறு கணம் நம் நல்லதுக்குத் தானே சொல்கிறார் என்று  கூட  நினைத்ததுமுண்டு.

ஒருவாறாக மோட்டார் சைக்கிள் ஆசை என்னுள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது, ஆனால் முழுமையாக அல்ல.அப்பாவின் பணத்தில் முதன் முதலாக வாங்கிய சைக்கிள் எனும் போதுதான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது அதை விற்கும் போது.


-தொடர்ந்து கதைப்போம்-

                                                         


















விஸ்வரூபம்

 photo bb_zps65c861bf.gif
மனதில் பட்டது
நீயுமா ??? என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது. காலத்தின் தேவைக்கேற்ப சில சில செயற்பாடுகளை மேற்கொள்வதுதான் சிறந்ததாக என் மனதில் பட்டது அதன் விளைவுதான் இப்பதிவு.


அப்படி என்னதான் இருக்கின்றது என்றதொரு ஆவலில்தான் திரைப்படத்தைப் பார்த்தேன் (திருட்டு டி.வி.டி யில்).பெரிதாக என்னால் குறைகளை இனங்கான முடியவில்லை என்று கூடச் சொல்லலாம்.

உண்மையில் கமலின் கடின உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் திரைப்படத்தை மிகவும் துல்லியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை திரைப்படத்தைப் பார்க்கும் எவரொருவராலும் இலகுவாக உணர்ந்து கொள்ள முடியுமென்பதுதான் தெளிவான உண்மையாகும்.


                                                                                                     

திரைப்படத்தைப் பற்றி ஏராளமானவர்கள் ஏராளமான விமர்சனங்களை எழுதிவிட்டனர் ஆனால் என் பங்குக்கும் ஏதாவது கிறுக்கலாம் என்றடிப்படையில்தான் இதைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையும் கூட.
                                                                 

படத்தின் தலைப்புக்கு ஏற்றால் போல் திரைக்கதையும் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றது  என்பதுதான் மிகவும் முக்கியமானதொரு விடயமாக என்னால் உணரப்பட்டது.படத்தின் காட்சியமைப்புக்கள் பிரமாண்டமாக அசத்தப்பட்டிருக்கின்றன மேலும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றார்கள் என்றால் அதில் எந்தவொரு பொய்யோ , அலட்டலோ இல்லையென்று கூடச்  சொல்லலாம்.

                                                                       
நான்  உண்மையில் இங்கு திரை விமர்சனத்தை எழுத முற்படவில்லை ஆனால் என் மனதில் தோன்றிய சில நிஜங்களைத்தான் கிறுக்க முற்பட்டேன் என்பதை வாசிப்போருக்கு  கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

திரைக்கதைக்கு ஏற்றால் போல் கதாப்பாத்திரங்களையும் மிகவும் அருமையாக அமைத்திருக்கிறார் என்றால் கூட அதில் எந்தவொரு மிகைப்படுத்தப்பட்ட  கருத்துமில்லை.

                                                                             

படம் ஆரம்பிக்கும் போது பறக்கும் புறாக்களில்தான்  கிளைமாக்சையும் புகுத்தியிருப்பது உண்மையில் பாராட்டப் பட வேண்டியதொரு யுக்தியாகத்தான் என் மனதில் தோன்றியது.உண்மையில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களிலும் தனித்தன்மையான வேறுபாடுகள் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.

                                                                             
பூஜாக்குமார் மற்றும் ஆன்றியா ஆகியோர் கதைக்கு ஏற்றாப் போல் தாங்களை  சரியான முறையில் தயார் படுத்தி நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகத்தான் தோன்றுகின்றது். பூஜாக்குமார்  டொக்டருடன் பேசும் விதம் உண்மையிலே அருமையாகயிருந்தது.

                                                                                             
ஏன் பூஜாக்குமார் ?? என்ற கேள்விக்கான விடையை  திரைப்படத்தின்  இறுதியிலேயே போட்டு உடைத்திருக்கிறார் கமல்ஜி. இது எத்தனை பேருக்கு புரிந்தது என்பதில்தான் எனக்குக்  கொஞ்சம்  ஐயமிருந்தது.



தொழில்நுட்பத்தை எவ்வளவுக்கு புகுத்த முடியுமோ அவ்வளவுக்குப் புகுத்தி  ஹொலிவுட்டுக்கு நிகரானதொரு தமிழ்த் திரைப்படத்தைப் படைத்திருப்பது தமிழ் சினிமாவின் சாதனையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.சாதனைகளுக்கு சோதனை  வரும் என்பதை சரியாக உணர்ந்து கொண்ட சந்தா்ப்பமாக இதைக் குறிப்பிடலாம் என்றால் அதில் எவ்விதத்  தவருமில்லை.
                                                                                           

ஆப்கானிஸ்தான் காட்சிகளில் பிண்ணிருக்கிறார்கள் மேலும் நுணுக்கமான ஒளிப்பதிவு அதை சர்வதேச அளவுக்கு நகர்த்தியிருக்கின்றது என்பதுதான் நிஜமும் கூட. ஆப்கானிஸ்தான் மக்களின்  வாழ்க்கையை இதன் ஊடாக ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளவும் விஸ்வரூபம் உதவியிருக்கின்றது.


முஸ்லிம் மக்களுக்கு எந்த ரீதியில் திரைப்படம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது இன்று வரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது.சில அற்ப அரசியல் நோக்கங்களுக்காக  மதங்களைப்  பகடைக் காயாகப் பயன்படுத்துவதையே நம்மவர்கள் வழக்கமாக்கிவிட்டனர் என்பதுதான் மறுக்கவோ , மறைக்கவோ முடியாத உண்மையாகும்.

உண்மையில் பதிவுகள் நீளமாக  இருந்தால் வாசிப்போரின் மனோநிலை சற்று வேறுபட்டதாகவே  இருக்கும் என்ற  காரணத்தினால்தான் என்னுடைய பதிவை  ஓரளவுக்கு கட்டுப்பாடாக கிறுக்கியிருக்கிறேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.
                                                                                               

விஸ்வரூபம் பற்றி பக்கம் பக்கமாக கிறுக்கலாம் ஆனால் அதை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பதில்தான் மிகப்பெரிய ஐயப்பாடு என்மத்தியில் நிலவியிருந்ததன் பொருட்டே என்னுடைய பதிவை சற்று வேறுபட்ட கோணத்தில் சில சில முக்கியமான கருத்துக்களுடன்  தெரிவித்திருந்தேன் என்பதுதான் உண்மையாகும்.

தொடர்ந்து எழுதுவதற்கு நான் தயார் “விஸ்வரூபம்II ” ஐப் பற்றி ..................
(I am waiting.................)

தொடர்ந்து கதைப்போம்-










அழுத்தங்களின் போக்கு !!


பிரச்சினைகளின் அழுத்தம் அதிகரிக்கும்
போதுதான் ஒரு மனிதனின் திறமை வெளிப்படுத்தப்படுகின்றது.மனிதனாகப் பிறந்து விட்டால் பிரச்சினைகள் , சிக்கல்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுத்துத்தானாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதியும் கூட.பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இறந்த பிணமும் ஒன்றுதான் என்பது எனது கருத்து.


மனிதன் என்பவன் சாதனையாளன் .யாருக்குத்தான் பிரச்சினை இல்லை , தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் முதல் வெள்ளை மாளிகையில் வாழும் ஒபாமா வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினைகள் ஆட்கொள்கின்றன.


ஏதோ பிறந்தோம் , வாழ்ந்தோம் , இறந்தோம் என்றில்லாம் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெறுவதற்க்கு முற்போக்கு சிந்தனையாளர்களாக நம்மை மாற்றிக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.இதன் போது பிரச்சினைகளையும் , சவால்களையும்  எதிர்கொள்ளக் கூடிய மனோபாவம் வேறூன்ற ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.



ஐயோ !! இது என்னால் முடியாது !! என்று
தன்னை தாழ்த்திக் கொள்ளும் மனிதர்கள் நம்மில் எத்தனை போ் ??? உங்களை நீங்களே ஒரு கணம் சுய பரிசோதனை செய்து  கொள்ளுங்கள் நான் எப்படிப் பட்டவன் என்று ?? தன்னைப் பற்றி தான் முதலில் அறிந்து  கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையே இது.

உலகத்தின் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு செக்கனும் ஏதாவதொரு சாதனை நிகழ்ந்து கொண்டேதானிருக்கின்றது. எம்மைப் போன்ற மனிதர்கள்  தான் சாதித்தவர்கள் , சாதித்துத்கொண்டிருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாதிக்கவிருக்கின்றவர்கள் என்பதுதான் யதார்த்தம்.



பிறக்கும் போது எவரொருவரும் பெரிய சாதனையாளனாகப் பிறப்பதில்லை ஆனால் இறக்கும் போது ஏராளமான சாதனைகளுக்கு உரித்துடையவனாகவே மனிதன் இறக்கிறான் என்பது காலஓட்டத்தில் நாம் கானும் நிதர்சனமும் கூட.

என்னைப்பொருத்தமட்டில் சாதிப்பதற்க்கு  ஊனமோ , பணமோ ஒரு தடையல்ல.வறிய குடும்பத்தில் பிறந்து சாதித்துக் காட்டிய சாதனையாளர்களை இவ்வுலகம் இனறும் நினைவு கூறிக்கொண்டேதானிருக்கின்றது.

அப்துல் கலாம் , ஆபிரஹாம் லிங்கன் போன்றவர்கள் என்னை ஈா்த்த மாமனிதர்கள் ,சாதித்துத்காட்டியவர்கள். ஐசாக் நியுட்டனின் சாதனைகளை என்னுவதற்கே ஒருநாள் வேண்டும் என்பார்கள் அந்தளவுக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எம்மைப் போல் சாதாரன மனிதனாகப் பிறந்து சிகரத்தைத் தொட்ட மாபெரும் சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியவர்.



பிரச்சினைகள் , தோல்விகள், சவால்கள் அழுத்தும் போதுதான் ஒரு மனிதனின்  உண்மையான பலம் , திறமை வொளிப்படுத்தப்படுகின்றது. வேறுபட்ட சிந்தனைப் போக்கின் மூலம்தான் மனிதனின் சாதனைகள் எழுச்சி பெற ஆரம்பிக்கினறன என்பதுதான் உண்மை.




நேர்த்தியான சிந்தனைகள் ஒரு மனிதனை சிகரத்தின் உச்சிக்கே  தூக்கிச்செல்கின்றன என்றதொரு  எண்ணக்கரு என்னுள் ஆழமாக பதிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதன் விளைவுதான் இப்பதிவும்  கூட......



-தொடர்ந்து  கதைப்போம்-










Creative Commons License
manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
Related Posts Plugin for WordPress, Blogger...