நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவையே இங்கு பதிவிக்கிறேன்.அண்மையில் நோ்முகப்பரீட்சையொன்றுக்காக சென்றிருந்தேன்.உண்மையில் , அது ஊடக அமைச்சின் பதவியொன்றுக்காகவே நடைபெற்றது.ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளுமை மற்றும் ஊடகத் தகைமைகள் போன்றன தகுதிகளாக வினவப்பட்டன.அட, சும்மா போய்ப் பார்ப்போம் என்ற உள் மனதின் வேண்டுகோளுக்கிணங்கவே போக வேண்டிதாயிற்று.அன்று மழை வேறு ”சோவென” பெய்து கொண்டிருந்தது.ஒருவாறாக இடத்தையும் கண்டுபிடித்து சென்றாகிவிட்டது.
வரவேற்பறையில் , இரண்டாவது மாடிக்குப் போகுமாறு உத்தரவிடப்பட்டது.அங்கு நான் மட்டும் தான் சென்றிருந்தேன் , முதலாம் நபராக என்று நினைக்கிறேன்.சரி, எதுவானாலும் பார்ப்போம் என்றெண்ணிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து அழைக்கும் வரை காத்திருந்தேன்.
உள்ளே அழைக்கப்பட்டேன், பொதுவாக, அரச நிறுவனங்களில் பனல் இன்டவியுக்கள் தான் மேற்கொள்ளப்படும்.அதற்கமைய,இதுவும் அவ்வாறுதான் அமைந்தது.மூன்று பேர். ஒரு ஆண், இரண்டு பெண்கள்.
குட் மோனிங் ! என்று வாயிலிருந்து கொஞ்சம் மரியாதை கலந்த காலை வணக்கம் சொல்லப்பட்டது, என்னால் மூவருக்கும் பொதுவாக. Please sit down , அமரும் படி கூறப்பட்டது.குட் யு பிலீஸ் கிவ் மீ யுவர் சிவி??? , ஆண் குரல். யார், சுவர்??? என்று இழுத்துக் கொண்டு சீவியை நீட்டினேன்.
ஆர் யு ஏ பிரிலான்ஸ் ஜேர்னலிஸ்ட்?? , முதலாவது வினா வினவப்பட்டது என்னிடம்.நானும் பதிலுக்கு yes sir, i'm also be a freelance Journalist. என்று கூறிவிட்டேன்.பின்னர்,அடுக்கடுக்காக கேள்விக்கனைகள் என்னை நோக்கி வீசப்பட்டன. நானும், பதிலளித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சம் பதட்டமாக.வழமையாக எல்லாருக்கும் ஏற்படும் ஒன்றுதானே பதட்டம் .
ஒரு மாதிரியாக, எல்லாவற்றுக்குமாக பதில் கூறிவிட்டிருந்தேன்.ஆனால் திருப்தியில்லை.இறுதியாக , We'll have to be shortlisted , Although if you select, we'll conduct you as soon for the second round of interview with our secretary. என்று கூறப்பட்டது ஆண் குரலினால்.நானும் பதிலுக்கு, OK sir, thank you so much, have a nice day for you.என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
பின்னர் அடுத்த நாள் ஐந்து மணி போல ஒரு அழைப்பு எனக்கு : Mr........... Could you please come for a second interview with our secretary on tomorrow at 10 a.m ??? Yes, Mam !! I'll be there on time, thank you so much. bye என்றவாரு உரையாடல் நிறைவுற்றது.
இப்போது, மனதில் ஒரு மகிழ்ச்சி கலந்த பயம். என்ன நடக்கப் போகின்றது நாளை?? என்ற வினாவுக்கான சபலமே அது.
அடுத்த நாள் காலை, நேர காலத்தோடு தயாராகியிருந்தாலும், வாகன நெரிசல் தாமதப்படத்தி விட்டது.நடப்பது நடக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு secretary office க்கு சென்ற போது எனக்கு முன்னதாக வந்திருந்த நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் ஒரு வித Interview க்கான டென்ஸனுடன்.அவர்களைக் கண்டவுடன் கனவுகள் கலைக்கப்பட்டது போன்றதொரு உணர்வு , தெரிவு செய்யப்படுவேனா ??? இல்லையா ???? என்ற குழப்பத்துடன்.
ஒருவாறாக என்னை சுதாகரித்துக்கொண்டு நானும் அமர வேண்டியதாயிற்று அவர்களுடன்.பின்னர் ஒவ்வொருவறாக சென்றுகொண்டிருந்தார்கள் என்னைத் தாண்டியவாரு.
இறுதியாக நானும் அழைக்கப்பட்டேன் , விசாலமான அறை ! CCTV கமராவினுடைய காட்சிகள் ஒரு பக்கமாக திரையில். மேசையில் ஒரு லப்டொப் , May i come sir?? Good Morning sir, மீண்டும் மரியாதை கலந்த வணக்கம் என்னிடமிருந்து. You Mr................ !!! " Yes, sir !! I'm................... என்றவாரு மீண்டும் கேள்விக்கணைகள் கொஞ்சம் காரசாரமாக.
அதில் ஒரு கேள்வி இவ்வாறாக : Do you have a twitter account ???? what is the ID of that ????? "Yes, sir !! But, i running that one of another name sir, not mine !!! #..........................
அவ்வளவுதான் , இன்டர்வியு பினிஸ்ட் !!! Ok, Thank you, Mr.................... for coming to this interview, as well Mr..................... we'll conduct you again, if you select.
இப்போ நான் waiting...................................................!!!! ----done----