இவ்வுலகிலுல்ல அனைவருக்கும் அவரவா் கருத்துக்களை முன்வைப்பதற்கு தாராளமான உரிமையிருக்கின்றது. எவ்வாறாயினும் கருத்துக்களை முன்வைக்கும் விதத்தின் மூலம்தான் கருத்துக்களின் உண்மைத்தன்மை மற்றும் அதன் ஆழம் வெளிப்படுத்தப்படுகின்றது.வலைப்பதிவுகள் மூலம் ஏராளமான விடயங்கள் அலசப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே , ஆனால் எந்த அளவுக்கு உண்மையான விடயங்கள் அலசப்படுகின்றன என்பதுதான் முக்கியமானதாகும்.
டில்லியில் நடந்ந கொடூரம் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை ஏனெனில் அதைத்தான் தலைப்பு செய்தியாக அனேக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் அலசியிருந்தன.
இங்கு நான் அந்த மாணவிக்கு என்ன நடந்தது என்ற பிசைந்த சோற்றை பிசைய விரும்பவில்லை. சற்று வேறுபட்ட கோணத்தில் இதை அணுகலாம் என்ற என்னத்தில்தான் இதை பதிவேற்றியிருக்கிறேன்.
குற்றம் நடந்தது என்ன? என்பதை ஏராளமான ஊடகங்கள் ஏராளமான கருத்துக்களை முன்வைத்த வண்ணமேயிருக்கிறார்கள். காரணம் என்னவென்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
பாலியல் ரீதியில் தினந்தோரும் ஏராளமான துஸ்பிரயோயங்கள் நடந்த வண்ணமேதான் இருக்கின்றன. இதற்கு யார் காரணம்? என்று பார்த்தால் பெண்கள்தான் என்றும் பெண்கள் மீதுமே பெருமளவு குற்றமும் சாட்டப்படுகின்றது.எது எவ்வாறாயினும் இதை மறுக்கவும் முடியாது.
நவநாகரீக ஆடையென்ற போக்கில் அறை குறையான ஆடைகளை உடுத்துவதென்பது மூலாதாரணமான காரணமாக அமையப்பெறுவதை யாராலும் மறுக்க முடியாது.பாலியல் ரீதியில் உணர்ச்சிகளை தூண்டும் விதமான ஆடைகளை உடுத்தும் போது. விளைவுகள் மோசமாகத்தான் அமையப்பெறுமென்பது திண்ணம்.இது நியுட்டனின் மூன்றாம் விதிக்கமைய என்றால் தவறில்லை.
Every Action has an equal and opposite Reaction
தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சியும் இதன் மீது ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதென்பது மறைக்க முடியாத உண்மையாக வெளிப்படுத்தப்படுகின்றது.ஆபாச இணையத்தளங்களின் எண்ணிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களின் விரிவாக்கம் போன்றவறை இவற்றுக்கு ஊக்கியாக அமைகின்றன.
பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது ஆனால் குறைக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கிமிடத்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.