போட்டோ சொப் முற்றிலும் இலவசம்! Photoshop CS2

போட்டோ சொப்பின் வரலாறு மிகவும் நீண்டது அதாவது 25 வருடங்கள் பழமையானது. உண்மையில் இது 1990 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக திருத்தப்பட்ட பதிப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. சுமார் 25 மொழிகளில் முற்றிலும் புதிய மேம்படுத்தலுடன்  இவை கிடைக்கப்பெறுகின்றன என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் இதைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களுக்கு விக்கிபீடியா மற்றும் அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குள் நுழைவதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.


பல்வேறு துறைகளில் போட்டோ சொப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும், இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை. எது எவ்வாறாகினும் அடோப் நிறுவனமானது தனது மென் பொருட்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதில்லை என்ற உண்மையும் எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

உண்மையில் இதற்கான காரணம் அவை தொழிற் துறையில் மிகவும் இன்றியமையாத மற்றும் முன்னனியான மென் பொருள் உற்பத்திகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதே எனலாம்.

ஆனால் சில நேரங்களில் அதாவது மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய பதிப்புகளின் தாக்கத்தால் பழைய பதிப்புகளை இலவசமாக வழங்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என்பது சற்று மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மேலும் இவை நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தொடர் எண்களுடன் கிடைக்கப் பெறுவதே சிறப்பம்சமாகும்.

இங்கு நீங்கள் அடோப் நிறுவனத்தின் CS2 உற்பத்திகளை முற்றிலும் இலவசமாக சட்ட ரீதியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.



1. இவற்றை தரவிறக்கிக் கொள்ள உங்களது கணினி பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்யதல் வேண்டும்.



  • Mac OS X v.10.2.8–v.10.3.8, PowerPC® G4 or G5 processor
  • Microsoft® Windows® 2000/Windows XP, Intel® Pentium® III or 4 processor

  • 2. இரண்டாவதாக பின்வரும் இணைப்பை சொடுக்குவதன் மூலமாக தரவிறக்க வலைப் பக்கத்திற்குள் நுழையலாம். இணைப்பு 
                                                       
    3. மூன்றாவதாக Accept என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக:


    பின்வருமாறு அடோப் ஐடியினுள் உள்நுழையுமாறு வினவப்படுவீர்கள்


    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இருந்தால் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் வழங்கி  உள்நுழையலாம்.

    அவ்வாறு உங்களுக்கு அடோப் ஐடி இல்லை எனின், 

    Get and Adope ID என்பதை சொடுக்குவதன் மூலமாக உருவாக்கி கொள்ளலாம்



    அவ்வாறு உருவாக்கி உள் நுழைந்ததன் பின்னராக
    பின்வரும் பக்கத்திற்கு திருப்பப்படுவீர்கள் அங்கு நீங்கள் மீண்டும்
    ஒரு முறை பின்வரும் ACCEPT பொத்தானை அழுத்தி 
    உங்களது தரவிறக்க பட்டியலை பார்வையிடலாம்.



    அதன் பின்னர் ஆங்கில மொழியை தெரிவு செய்து அங்கே போட்டோ சொப் CS2 என்பதை சொடுக்கி உங்களது தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.



    இங்கு இரண்டு விதமான இயங்கு தளங்களுக்கான தரவிறக்க தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன 

    1. மெக் - அதாவது நீங்கள் அப்பிள் இயங்குதளம் பயன்படுத்தினால்
    2. வின்டோஸ்- மைக்ரோ சொப்டின் வின்டோஸ் இயக்குதளம் பயன்படுத்தினால்

    அதன் அருகில் ஒவ்வொன்றுக்குமான சட்ட ரீதியான தொடர் எண்கள் தரப்பட்டுள்ளன அவற்றை இறுதியாக மென் பொருளை நிறுவும் போது
    உள்ளிட வேண்டும். 

    இதன் பின்னர் PHOTOSHOP CS2 உடன் உங்களது மாயாஜால வித்தைகள் மற்றும் இன்னோரன்ன பற்பல விடயங்களை மிகவும் இலகுவாகவும் துல்லியமாகவும் மேற் கொள்ளலாம் என்பது உறுதியே!

    குறிப்பு: இணைய சந்தைகளில் குவிந்து கிடக்கும் இரண்டாம் தர போலியான மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை விடுத்து அதை விட மேம்படுத்தலில் சற்றுத் தாழ்வான சட்ட ரீதியான முறைபடியாக வழங்கப்பட்ட தொடர் எண்களுடன் கூடிய இவ் மென் பொருட்கள் எவ்வளோ சிறந்தது. மேலும் அவ்வாறு கிடைக்கப் பெறும் சில மென் பொருட்கள் ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் தாமாகவே காலாவதியாகி விட்டு பணம் செலுத்துங்கள் என்று உங்களை அடிக்கடி தொல்லைப் படுத்தும் என்பது நிச்சயமே. 

    ---- தொடா்ந்தும் கதைப்போம்  தொழிநுட்பத்துடன்  இதுபோலவும்....







    எதையோ தேடி எனது பயணம்!

    இற்றைக்கு சுமார் இருபந்தைந்து வருடங்களுக்கு முன்னராக ஆரம்பிந்த எனது பயணம் - எதையோ தேடி என்றவாறு தொடர்கிறது.......

    வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் பல, அவற்றுல் ஒரு சிலவையே பொக்கிஷங்களாகும் மற்றவை வடுக்கள் நிறைந்த அனுபவங்களாகவும், தோல்விச் சரித்திரங்களாகவுமே பதிவிக்கப்படுகின்றன.

     “பொக்கிஷங்கள்” இனிமையானவை, ஒவ்வொரு மனிதனினதும் வாழ்க்கையில் ஏதோ ஒரு மூலையில் பொக்கிஷங்களும் பொதிந்துதான் கிடக்கின்றன என்பதுதான் நிசப்தமாகிப் போன உண்மை.

    பொக்கிஷங்களுக்கான வடிவங்கள் பல, அவை நிச்சயமாக மனிதனுக்கு மனிதன் வேறுபாட்டையே காட்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட ரீதியிலானதொரு கருத்து.

    “அப்படியானால் உனது பயணம் பொக்கிஷங்களைத் தேடியவாறா???”
     என்று என்னிடம் கேட்கப்பட்டால், உண்மையில் அதற்கான பதில் என்னிடத்திலிருந்து “ஆம்” என்றவாறுதான் அமையும்.

    என்னைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடயம் ஒரு மனிதனது வாழ்க்கையில் அவனுக்கு மகிழ்ச்சியையும் பூரண  திருப்தியையும் கொடுக்குமோ, அதுவே அவனுடைய பொக்கிஷமாகும். 

    ஆகவே மனிதனது வாழ்வியல் போராட்டங்கள் மற்றும் பயணங்கள் அனைத்துமே “பொக்கிஷங்களைத்” தேடியும் நோக்கியுமாகவே அமைந்து விடுகின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

    சோ பிரண்ட்ஸ், 

    பொக்கிஷத்தைத் தேடி நீங்களும் ஒரு பணயம் வைக்கலாமே???





















    இன்னும் படிச்சு முடியலயா ??? குட்டிக் கிறுக்கல்

    என்னிடம் அதிகம் பேர் கேட்கும் கேள்வி
    “தம்பி நீங்க இன்னும் படிச்சு முடியலயா ??? ”

    // இன்னும் கொஞ்சம் இருக்கு // இதத்தான் நானும் அஞ்சு வருசமா சொல்லிக்கிட்டு வாறன்.

    “படிச்சு முடியற” எண்டா என்ன ? என்கிறதுதான் என்னன்ட பெரிய டவுட்டு

    இலங்கையின் கல்வி அமைப்பானது மிகவும் நேர்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் என்னிடத்திலில்லை.

    ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி அதன் பின்னர் பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி அதன் பின்னராக இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டக் கற்கைகளுடன் இணைந்தவாறான தொழில்சார் கற்கைகள் என தொடர்ச்சியாக அதன் போக்கிலேயே அது பயணிக்கின்றது.

    35% (சதவீத)மானவர்களின் மனநிலை என்னவென்றால் ''ஒன்று தொடக்கம் உயர்தரம்" வரையில்தான் படிப்பு என்றவாறு.

    ஏஸ், ஏற்றுக்கொள்ளலாம் !!

    மீதமுள்ள 65% (சதவீத)மானவர்களின் மனநிலை பல்கலைக்கழக அடிப்படை பட்டக் கல்வி வரையில் ஓரளவுக்கு விரிவுபடுத்தப்படுகின்றது.

    ஆம், இதையும் ஏற்றுக்கொள்ளலாம் !!!

    உண்மையில் ஏராளமானோருக்கு பல்கலைக்கழகத்தின் பின்னரான இரண்டாம், மூன்றாம் மற்றும் இன்னோரன்ன பட்டக்கற்கைகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை போலும்.

    அல்லது ஏதாவது ஒரு கற்கையை தனியார் கல்லூரியில் மேற்கொண்டு துபாயோ, சவூதியோ, லண்டனோ சென்றால் அத்துடன் கதை ஓவர் என்றவாறுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று என்னத்தோனுகின்றது.

    //நான் சாகுற வரைக்கும்  படிச்சிக்கிட்டுத்தான் இருப்பேன்// என்னா கேக்குறவங்க நம்மல ஒருமாதிரியாத்தான் பாப்பாங்க.

     “என்ன இவனுக்கு தல கில சரியில்லயோ” !! என்றுமாக வதந்திகள் காட்டுத் தீ போல பரவிவிடும் .

    அதுக்குத்தான் இன்னம் கொஞ்சம் இருக்கு,  கொஞ்சம் இருக்குன்னு கூறி தப்பித்துக் கொள்வது.

    என்னைப் பொறுத்தமட்டில் கற்றல் என்பது மரணிக்கும் வரை  பயணிக்கக்கூடியது என்றே கூறுவேன்.

    ''Yes, its a life-long process''

    அம்மா, அக்கா, அண்ணா, அப்பா, தம்பி ராசா மார்களே ! ஒண்ட மட்டும் தெளிவா புரிஞ்சுக்கொங்கோ, // படிப்புக்கு என்றய்க்குமோ முடிவில்ல // 
    எங்கிற உண்மய.

    ----- தொடர்ந்து கதைப்போம் இதுபோலவும் கிறுக்குத்தனமாக ----------































    மற்றுமொரு உறுப்பினர் ! வணக்கம் !! சூ(TSU)

    இணையப் புரட்சியலில் Social Media எனும் சமூக வலைத் தளங்களின் பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்(Facebook) என்று சொல்லக்கூடிய முகப்புத்தகம்,  டுவிட்டர் (Twitter), கூகிலின் பினாமியான கூகில் பிளஸ்(Google+) அத்துடன் லிங்இன்ட்(Linkedin) எனும் அதிவிசேட தொழில்சார் சமூக வலைத்தளம் என்றவாறு பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கின்றது.

    சமூக வலைத்தளம் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது ?? அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் என்ன ??? என்றவாறான அடுக்கடுக்கான கேள்விக்கணைகளுக்கான விடைகள் நம்மில் பல பேறுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

    இன்று பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு  போட்டுக் கொண்டிருக்கும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நான் மேற்கூறியவை பற்றிய போதுமான அறிவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. அதிலும் குறிப்பாக சிறப்பானதொரு கல்வி மட்டத்தில் ஜாம்பவான்களாக வீற்றிருப்பவர்களும் இதில் உட்சேர்க்கப்படுவதுதான் சற்று கவலைக்குரிய விடயம்.

    நான் அறிந்தவரை பல பேர் தாங்களின் தொழில் சார் விடயங்களுக்கு அப்பால் துளியும் எந்தவொரு விடயத்தையும் அலசுவதில்லை. காரணம் கேட்டால் “அது நமக்கு வேண்டாத வேலை”   என்றுதான் பதில் வரும்.

    ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட  முடியாது என்பதுதான் எனது வாதம். உதாரணத்திற்கு, வைத்தியர் ஒருவர் சமையல் கற்பதில் தவறொன்றும் இல்லையே !  அதை விடுத்து நான் இது, நான் அது எனும் பந்தாக்கள் காட்டினால் இழப்பது பல.

    சரி இனி மெயின் மேட்டருக்கு வருவோம்,

    ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நம்முடவங்க ஏதாச்சும் செஞ்சுக்கிட்டுத்தான் இறுக்குறானுக. அதில இப்ப ரீசண்டா எண்டராகி இருப்பது, TSU எனும் வாய்க்குள் நுழைய மறுக்கும் “சூ” எனும் சமூக இணையத்தளம்.

    நான் நெனய்க்கிறன் தம்பிமார் இந்தப் பெயர ஜப்பான் மொழியிலிருந்து சுட்டிருப்பாங்களோ என்னவோ எண்டு,

    ஏஸ் காரணம் இருக்கு !!

    காய்ஸ், உங்களுக்க ஞாபகம் இருக்குமா சுனாமி ??? TSUNAMI 
    ஆமாங்க, நீங்க நெனயக்கிறது கரெக்ட். ''T" இற்கு சவுன்ட் இல்ல.

    ஆழிப்பேரலை எனும் பதத்தால் சுட்டிக்காட்டப்படும் இந்த சுனாமி ஜப்பான் மொழியிலிருந்து சுட்டது, வந்தது, போனது என்ற ஆதிக் கதையெல்லாம் தெரியும் தானே மக்களே !!

    அதே கேஸ்தான் TSU இற்கும் நடந்திருக்குமோ என நெனய்க்க தோனுதுங்க.

    சோ, இது நம்முட தனிப்பட்ட கருத்து மேலும் மாற்றுக் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

    பய புல்லயல்கள், சும்மா நல்லா டிசைன் பன்னிருங்கானுகள்,  யூஸ் பன்னவும் ஈசியாவிருக்கு ஆனாலும் பேஸ்புக்கின் வாடையடிக்கிறது என்னவோ உண்மைதான்.

    மேலும் இங்கு குறிப்பான  மற்றும்  முக்கியமான விசயங்கள் ரெண்டு இருக்கு, முதலாவது  கொஞ்சம் கவலையான மேட்டர் - “பேஸ்புக் போன்று லைவா கடலயெல்லாம்  போட முடியாது, எதுவானாலும் மெசேஜ்தான் போடனும் ”

    காய்ஸ் பாவங்க நீங்க !!

    இப்ப ரெண்டாவது மேட்டர்  “பாஸ் இவங்க உங்களுக்கு காசு தருவினமாம்”
    காசு, பணம், துட்டு, மணி மணி.

    என்ன ரெடியா ???

    ஏதோ புதுசா செய்றம் எண்ட பேர்ல எங்குட பய புல்லயல வாழ்க்கையில இப்புடி வௌயாடிட்டயலே மிஸ்டர் Sebastian Sobczak, வாய்க்கு நொழயுது  இல்ல அதான் இங்கிலீசுல அடிச்சு விட்டேன்.


    பயணம் தொடர வாழ்த்துக்கள் !!
































    ரசனியின் ஜிங்கா.... ஓ சொாறி “லிங்கா”

    முதல்ல எல்லாறும் என்ன மன்னிச்சுக்கொங்கோ, தலைப்பு கொஞ்சம் சொதப்பிடுச்சு. சோ ஐயம் றியலி சொறி போ தட்.

    டீசர், ரெய்லர் எண்டு சும்மா அம்புட்டு பந்தா காட்டி வெளியான திரைப்படம் இப்புடி எடயில .................. ஆகும் எண்டு ஆராச்சும் நெனச்சிங்களா?????

    உண்மையில படத்த நான் தியட்டருக்கெல்லாம் போய் பாக்கலங்க, எப்போயும் போல திருட்டு டிவிடி தான் !


    தியட்டருக்கெல்லாம் போய் பாக்குர அளவுக்கு வசதியில்லீங்க !
    விடுங்க அது நம்முட சோகக் கதை, அத விட்டுட்டு 
    இப்ப லிங்காக்கிட்ட வருவோம்.

    உண்மையச் சொன்னா படம் சுமார் மூஞ்சிக் முமாரு, 

    காரணங்கள் அஞ்சு - வைவ் ரீசன்ஸ் (சோட் - நோட்ஸ் : நச்சிண்டு அஞ்சு)
    ------------------------------------------------------------------------------------------------------------------------

    1. பழைய சோத்துக் கதை
    ஐயா, ராசா “கே.எஸ்” ஒங்குட ரெண்ட கொஞ்சம் மாத்தலாமே?
     சும்மா ஒரு எட்டு சுத்திப் பாருங்க இப்ப 
    என்ன நடக்குது தமிழ் சினிமால எண்டு. 
    பய புல்லய்கள் எப்புடி எப்புடியெல்லாம்
     யோசிச்சு கதை எழுதுறானுக எண்டு. 

    பிலிஸ் அப்டேட் யுவர் தோட்ஸ், 
    இது அட்வைஸ் இல்ல, சிமோல் ரிகுவஸ்ட். 

    ********************************************

    2. தலைவருக்கு வயசாச்சில்ல ???? 
     பல எடங்கல அப்பட்டமா தெரியுதோ, 
    என்ன செய்ய? சொல்லித்தான் ஆகனும். 
    எவ்வளவு மேக்-அப் போட்டாலும் சத்தியமா 
    வௌங்குது- வயசாச்சிண்டு. 

    குரல கொஞ்சம் தொய்வு மாதிரி வௌங்குது, ஆனா வௌங்கள.

    கிசு-கிசு- இமய மலைக்கு போற வயசுல ஏண் ஒங்களுக்கு வேண்டாத வேல எண்டு ஒரு தகவல், மிகவும் ரகசியமாக.
    நான் இத யாருக்கிட்யும் சொல்லலிங்க!! (யேஸ் புரமிஸ்)

    ஐயா !! அந்த பழைய கெட்டப்ப இப்பெல்லாம் பாக்க முடியலிங்க!! 
    (ஆதங்கம்)

    WOW !! வவ் !! - பில்லா, முரட்டுக்காளை, பாட்சா மற்றும் பல.

    ****************************************************

    3. ஜாடிக்கேத்த மூடி ??? -
    புரிஞ்சாச் சரி ???? 
    என்ன கொடும சரவணா????? 
    “கே.எஸ்” உங்களுக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கா !! 

    நல்லா வருது வாய்ல !! ஏதாச்சும் சொல்லி-கில்லிடப் போறன் !

    அதில “இது” வேற - “அப்பா. கண்ணக் கட்டுதே !! 

    இது எண்டா எது எண்டு புரியுதா ??

    அனுஸ்கா அக்கா - பரவால 
    ஆனா அந்த வெள்ள (அக்கா) புள்ள பாவம்

     யேஸ், ஓடியன்ஸ் நான் அவங்க ரெண்டு பேரயும் விட 
    வயசில சின்னவன் அதான் 
    கொஞ்சமாப்போல மரியாதய்க்கு 
    அக்கா எண்டு சொல்லிப்புட்டேன்.

    ஏதோ என்னால முடிஞ்சது !

    ******************************************************************

    4. வை- ஓல் மோஸ்ட் 3 அவர்ஸ் டைம் - ???? 
    அப்புடி பெரிசா என்னத்தய்யா சொல்ல, 
    இந்த நேர நீடிப்பு ??? 
    ரீசன் - பிலீஸ்???
    பல- பேரின் ஆவேசம் 
    கலந்த கேள்வி !! 

    அட ராசா!! 
    அந்த பைட்டுக்கா இம்புட்டு 
    நேரம் எடுத்த???

    விஜய்ங்கிட குருவி ஸ்டைலா ??? 
    அப்புடி பிலையிங் !! ஓ காட் !! 
    இட்ஸ், ஓசம் !! ??? 

    ரியலி இம்பிரஸ்ட் ஆயிட்டன். 

    *******************************************************************

    5. ஓ !! வில்லன்கள் ??? - 
    சிரிப்பு போலீஸ். 
    மசாலாவ கொஞ்சம் காரமா போட்டாத்தானே, 
    சும்மா டேஸ்ட் தூக்கலா இருக்கும். 
    இது எழுதப்படாத விதியெண்டு 
    ஒங்களுக்கு தெரியாதா - 
    மிஸ்டர்- குமாரு ??? !!! 

    பெடர் - லக் நெக்ஸ்ட் டைம் !! 
    போத் ஒவ் யு 
    *************************************************************

    நாங்க இப்புடியும் கதப்போமில்ல !!






















    ஆடாம ஜெயிச்சோமடா

    “எப்புடி நோகாம நொங்கு திங்குறது”   என்பதுதான் திரைக்கதை.

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கட் மெச் பிக்ஸிங் என்றால் என்ன ??? என்பதைப் பற்றிய அடிப்படை விளக்கத்தை முன்வைத்துத்தான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

    கருணாகரன், சிம்ஹா, பாலாஜி வேனுகோபால், ஆடுகளம் நரேன், ரவிக்குமார், விஜயலக்ஸ்மி, சேத்தன்-- இவர்கள்தான் திரைப்படத்தை தொய்வில்லாமல் பயணிக்க வைக்கும் சக்திகள்.

    பெரியதொரு அலட்டலில்லாமல் சொல்ல வந்த விடயத்தை மிகவும் கச்சிதமாக சொல்லி முடித்திருக்கார் இயக்குனர் பத்ரி, இவருக்கு இது ஆறாவது திரைப்படமாம்....

    சும்மா டயிமிங்ல அடிச்சிருக்காரு மனிசன் !!

    சிம்ஹாவுடன் ரவிக்குமார் சேர்ந்து அடிக்கும் ரகளைகள் பிரமாதம். அதிலும் குறிப்பாக ரேய்பெண் கூலிங்கிலாஸ் காமெடி- “சட்டப்படி”.

    தற்போது தமிழ் சினிமாவில் சிம்ஹாவுக்கென்றும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும், நேரம், ஜிகர்தாண்டா என்ற தொடர் வெற்றிப் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.

    கருணாகரனுக்கு எது வழங்கப்பட்டதோ அதற்க்கு ஏற்றவாரே அவருடைய வசனங்கள் மற்றும் உடலசைவுகள் அமைந்திருந்தன. இன்றைய தமிழ் சினிவாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த நகைச்சுவை நடிகர்களில்
    இவரும் ஒருவர்.

    இவருடைய படங்கள் அனை்தும் சூப்பர்ஹிட் அதிலும் சூது கவ்வும் மற்றும் நாமிருக்க பயமேன் படங்கள் அட்டகாசம்.

    ஆடுகளம் நரேன் மிகவும் திறமையான - குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர். இவரின் குரல்தான், இவரின் மிகப்பெரிய பலம்.

    இவர்தான் - ஆடாம ஜெயிச்ச மனுசன் !!

    சென்னைத் தமிழில் பேசுவதற்க்கு விஜயலக்ஸ்மி ரொம்ப மெனக்கெட்டு இருப்பாரு போல.

    இவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் மூலம் சேரிப்புர (சென்னையில் மட்டுமல்ல) மக்கள் தங்களது மிகவும் அடிப்படையான தேவைகளை (காலைக்கடனை) நிறைவேற்றுவதற்க்குப் படும் இடர்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

    இவ்வாறான முயற்சியை உண்மையில் பாராட்டலாம் ஏனெனில் நகைச்சுவை உணர்வோடு கூடியதொரு காட்சியமைப்பிலே சற்று காரமான ஒரு செய்தியாக சமூகத்திற்கு முன்வைத்தமை.

    ஆகவே ஒட்டு மொத்தத்தில் ஆடாமே (ஆடி) - ஜெயிச்சுட்டானுகள்.









    அத்தனைக்கும் ஆசைப்படு

    ஆசப்படுறது தப்பில்ல ஆனா அதிகமா ஆசப்  படுறதுதான் தப்பு
     என்றவாறான ஒரு தப்பான எண்ணக்கரு எம்மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில் இவ் எண்ணக்கருவேதான் தப்பு என்பேன்.

    ஆசைப்படும் குணவியல்பானது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டதொரு விலை மதிக்க முடியாதொரு பரிசு. அப்படியிருக்கையில் இது எந்த விதத்தில் தப்பாகும் என்பதுதான் என்னுடைய கேள்வி ?

    ஆசைப் படாமல் சாதனைகள் நிகழாது, சாதனைகள் இல்லாமல் சரித்திரங்கள் உருவாகாது. ஆகவே சரித்திரங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைவது இவ் ஆசைகள்தானே ??? 

    ஆசைகள் சிறியதாகவும் ஒரு எல்லைக்குள்ளும் அமையும் போதுதான் தோல்விகள் எம்மை பற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள் ஆசைப்படும் போது  அதன் மீதான ஈர்ப்பும் ஒரு எல்லைப் படுத்தப் பட்டதாகவே அமைந்து விடுவது இயல்பானதே.

    எந்தளவுக்கு ஆசைகள் விரிபுபடுத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பும் மற்றும் அதை அடைவதற்கான முயற்சிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவுள்ளது.

    அத்தனைக்கும் ஆசைப்படலாமா ??? அது தப்பில்லையா ???? என்று நீங்கள் சிந்திக்க கூடும் மற்றும் கேட்கக் கூடும்.  உண்மையில் இது ஒவ்வொரு தனி நபரினதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் பால் வேறுபடுகின்றது. அதுவே அவ்வாசைகளின் பால் பயணிக்கவும் எத்தணிக்கின்றது என்பதுதான் மறைமுகமான உண்மையாகும்.

    ஒரு குறுகிய வட்டத்துக்கள் எல்லைப்படுத்தப்பட்ட ஆசைகள் உண்மையில் குறுகிய சிந்தனையே தோற்றுவிக்கும் என்பது தெளிவே. ஆசைகள் அதிகமாகும் போதுதான், சிந்தனைகளின் வீச்சு ஒரு எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டு  அதனை அடைவதற்கான முயற்சியில் எம்மை கோர்த்து விடுகின்றன.

    என்னைக் கேட்டால் எனது ஆசைகள் வானம் போன்றவை என்றே கூறுவேன். அவைகளுக்கு எல்லைகளே கிடையாது என்றவாறுதான் அமையும். உண்மையில் நான் மிகவும் அதிகமாக ஆசைப்படும் ஒரு மனிதப் பிறவி என்றுதான கூற வேண்டும்.

    நாளுக்கு நாள் என்னுடைய ஆசைகளும் கற்பனைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலும் நான் ஒரு போதும் அவற்றை எல்லைப் படுத்தவோ அல்லது ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படுத்வோ முற்பட்டதில்லை.

    காரணம்,  நிச்சயமாக ஒரு நாள் அவ்வாசைகள் அனைத்தும் நிஜமாகும் என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான்; என்றும் கூறலாம்.

    என்னுடைய ஆசைகள் அதிகமாகும் போதுதான் என்னுடைய வேகமும் அதிகமாவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு.

    ஏன் என்னுடைய ஆசைகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் போட்டு முடக்க வேண்டும் ??? அட ஆசைப்படுவதிலும் கஞ்சத்தனமா ??? என்றவாறு என்னுள் நானே எழுப்பிக் கொண்ட வினாக்களின் விளைவே, அத்தனைக்கும் ஆசைப்படு என்ற மனவியல்பு.

    ஆசைகள் பலவிதமாக அமையலாம், தப்பில்லை ஆனால் அவ்வாசைகள் மூலம் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படத்தாத விடத்து அவ் ஆசைகள் நமக்கு எவ்வித பாதிப்பையும் தரப் போவதில்லை.

    ஆனால் ஒரு வேளை மாற்றமாக,

    நடைபெற்றால் அதன் மூலம் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். 

    தொடர்ந்தும் கதைப்போம் இது போலவும் வேறு விதமாக................
























    Creative Commons License
    manathilpaddathu by manathil-paddathu.blogspot.com is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License.
    Related Posts Plugin for WordPress, Blogger...